தமிழகம் பாணியில் ஜார்க்கண்ட் அதிரடி: இடஒதுக்கீடு 77% ஆக அதிகரிப்பு- 9வது அட்டவணையில் சேர்க்க தீவிரம்!
ராஞ்சி: தமிழகத்தைப் போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு 77% ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா இன்று அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தீவிரம் காட்டி வருகிறார்.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீடு அளவு 69% ஆக அதிகரிக்கப்பட்டது. அத்துடன் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இதற்கான சட்டம் சேர்க்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடுக்கு பாதிப்பு இல்லை என்கிற நிலைமை உள்ளது. இதனால் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை திராவிடர் கழகம் வழங்கியது.

69% இடஒதுக்கீடு வழக்கு
தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இப்போதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்னொரு பக்கம், தமிழகத்தைப் பின்பற்றி இடஒதுக்கீட்டு அளவை அதிக்கரிக்கும் நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொண்டும் வருகின்றன.

ஜார்க்கண்ட் அரசு அதிரடி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்க் முன்னர் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை இன்று ஜார்க்கண்ட் மாநில அரசு நிறைவேற்றி இருக்கிறது. ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்த இடஒதுக்கீடு அளவை 77% ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தைப் போல 77% இடஒதுக்கீட்டு சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கவும் அம்மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

இடஒதுக்கீடு அளவு என்ன?
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தற்போதைய இடஒதுக்கீடு: எஸ்சி- 10%; எஸ்டி 26%; ஓபிசி 14%; இடபிள்யூஎஸ்- 10% இந்த இடஒதுக்கீடு அளவு மாற்றப்பட்டுள்ளது. இதன்படி எஸ்சி- 12%; எஸ்டி-28%; இபிசி-15%; ஓபிசி-12%; இடபிள்யூஎஸ்- 10% இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு அளவு 77% ஆக அதிகரித்துள்ளது.

அதிரடி ஜார்க்கண்ட் அரசு
அண்மையில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த தீர்ப்பின் போது, மண்டல் கமிஷன் வழக்கில் இடஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகமாகக் கூடாது என்ற தீர்ப்பு பற்றி கவலைப்படவில்லை. ஆகையால் 50% இடஒதுக்கீட்டு வரம்பை உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு மீறுகிறது என்பதை உச்சநீதிமன்றம் கவனத்தில் வைக்கவும் இல்லை. இது ஒருவகையில் மாநிலங்கள் இடஒதுக்கீடு அளவை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பாகவும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications