தமிழகம் பாணியில் ஜார்க்கண்ட் அதிரடி: இடஒதுக்கீடு 77% ஆக அதிகரிப்பு- 9வது அட்டவணையில் சேர்க்க தீவிரம்!
ராஞ்சி: தமிழகத்தைப் போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு 77% ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா இன்று அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தீவிரம் காட்டி வருகிறார்.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீடு அளவு 69% ஆக அதிகரிக்கப்பட்டது. அத்துடன் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இதற்கான சட்டம் சேர்க்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடுக்கு பாதிப்பு இல்லை என்கிற நிலைமை உள்ளது. இதனால் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை திராவிடர் கழகம் வழங்கியது.

69% இடஒதுக்கீடு வழக்கு
தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இப்போதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்னொரு பக்கம், தமிழகத்தைப் பின்பற்றி இடஒதுக்கீட்டு அளவை அதிக்கரிக்கும் நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொண்டும் வருகின்றன.

ஜார்க்கண்ட் அரசு அதிரடி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்க் முன்னர் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை இன்று ஜார்க்கண்ட் மாநில அரசு நிறைவேற்றி இருக்கிறது. ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்த இடஒதுக்கீடு அளவை 77% ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தைப் போல 77% இடஒதுக்கீட்டு சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கவும் அம்மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

இடஒதுக்கீடு அளவு என்ன?
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தற்போதைய இடஒதுக்கீடு: எஸ்சி- 10%; எஸ்டி 26%; ஓபிசி 14%; இடபிள்யூஎஸ்- 10% இந்த இடஒதுக்கீடு அளவு மாற்றப்பட்டுள்ளது. இதன்படி எஸ்சி- 12%; எஸ்டி-28%; இபிசி-15%; ஓபிசி-12%; இடபிள்யூஎஸ்- 10% இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு அளவு 77% ஆக அதிகரித்துள்ளது.

அதிரடி ஜார்க்கண்ட் அரசு
அண்மையில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த தீர்ப்பின் போது, மண்டல் கமிஷன் வழக்கில் இடஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகமாகக் கூடாது என்ற தீர்ப்பு பற்றி கவலைப்படவில்லை. ஆகையால் 50% இடஒதுக்கீட்டு வரம்பை உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு மீறுகிறது என்பதை உச்சநீதிமன்றம் கவனத்தில் வைக்கவும் இல்லை. இது ஒருவகையில் மாநிலங்கள் இடஒதுக்கீடு அளவை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பாகவும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications