சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
ராஞ்சி: ஜார்க்ண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி கல்பனா சோரன் அம்மாநிலத்தில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது.

அங்கு அதுவரை முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது சுரங்க முறைகேடு புகார் எழுந்த நிலையில், அந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்தது.
கைது: இது தொடர்பான விசாரணைக்கு அமலாக்கத் துறை 10 முறை அவருக்குச் சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் ஒரே ஒரு முறை மட்டுமே விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அதன் பிறகு அவர் எந்தவொரு விசாரணைக்கும் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனையிட்டனர்.
சுமார் 7 மணி நேரச் சோதனைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அப்போதே அவரது மனைவி கல்பனா சோரன் முதல்வராகப் பதவியேற்பார் எனக் கூறப்பட்டது. இருப்பினும், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சம்பாய் சோரன் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கல்பனா சோரன்: ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சுமார் 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது அவரது மனைவி கல்பனா சோரனும் அரசியலில் களமிறங்கியுள்ளார். அங்குக் காண்டே தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் கல்பனா சோரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டி: இந்த காண்டே தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சர்பராஸ் அகமது தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் மே 20ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அத்துடன் இந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் தான் கல்பனா சோரன் போட்டியிடுகிறார்.
ஹேந்த் சோரன் இருந்த வரை கல்பனா சோரன் அரசியலில் இருந்து விலகியே இருந்தார். ஹேமந்த் சோரன் கைதுக்கு பிறகு கடந்த மார்ச் 4ஆம் தேதி கிரிதிஹ் மாவட்டத்தில் நடந்த ஜேஎம்எம் கட்சியின் 51வது நிறுவனத் தின விழாவில் தான் இவர் முதல்முறையாக அரசியல் மேடை ஏறினார். கடந்த 2019இல் ஹேமந்த் சோரன் கூட்டணி ஆட்சியை அமைத்த நிலையில், அப்போது முதலே ஆட்சியைக் கவிழ்க்க எதிரிகள் சதித்திட்டம் தீட்டுவதாகக் குற்றஞ்சாட்டி இருந்தார். அதன் பிறகு பல அரசியல் கூட்டங்களில் கல்பனா சோரன் பங்கேற்ற நிலையில், இப்போது அவர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இவர்: கல்பனா சோரன் எம்டெக் மற்றும் எம்பிஏ படித்தவர், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தனது பள்ளிக்கல்வியை முடித்த கல்பனா, புவனேஸ்வரில் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டங்களைப் பெற்றார். இப்போது அவர் காண்டே தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவருக்கு எதிராக பாஜக சார்பில் சீதா சோரன் என்பவர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications