ஜேஎம்எம் கூட மதிக்கலியே.. காங்கிரசுக்கு நோஸ் கட்.. ராஜ்யசபா வேட்பாளரை தன்னிச்சையாக அறிவித்து அதிரடி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான வேட்பாளரை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தன்னிச்சையாக அறிவித்ததால் காங்கிரஸ் கட்சி கடும் கோபத்தில் இருக்கிறதாம். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம்.- காங்கிரஸ் கூட்டணி எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம்., காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்றும் பிரதான கட்சிகள். மாநில கட்சியான ஜே.எம்.எம், அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்து பாஜக, காங்கிரஸ் இரண்டின் மீது சவாரி செய்வது வழக்கம். இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் குழப்பங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.

ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜே.எம்.எம் 30, காங்கிரஸ் 17 இடங்களைப் பெற்றது. ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ், சிபிஐஎம்எல் ஆகியவை ஆதரவுடன் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசு, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியான பாஜக 26 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2020-ல் ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. அப்போது ஜே.எம்.எம். நிறுவனர் சிபு சோரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிபுசோரனை ஆதரித்தனர். அப்போதே அடுத்த ராஜ்யசபா தேர்தல் சீட் காங்கிரஸுக்குதான் என எழுதப்படாத ஒரு ஒப்பந்தம் இரு கட்சிகளிடையே ஏற்பட்டது.
தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா இடத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் ஜேஎம்எம்-காங்கிரஸ் இணைந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை ஹேமந்த் சோரன் சந்தித்தும் பேசியிருந்தார். இதனால் ஜார்க்கண்ட் மாநில காங்கிரசார் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் ஜே.எம்.எம். கட்சி திடீரென அக்கட்சியின் மகளிர் அணி தலைவர் மஹூவா மாஞ்சியை ராஜ்யசபா தேர்தல் வேட்பாளராக அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதனால் ஜே.எம்.எம்.- காங்கிரஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஜே.எம்.எம். கட்சியின் இத்தகைய நிலைப்பாட்டால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நீடிக்குமா? என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications