ஜியோகாயின் போலி ஆப்... மோசடி கும்பல் - அலறியடித்து அறிக்கை விட்ட முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானியின் கனவு திட்டமான ஜியோவின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்களை நம்ப வேண்டாம் என ரிலையன்ஸ் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது
மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோகாயின் திட்டத்திற்கு என்று போலியாக ஒரு ஆப்பை உருவாக்கி மக்களை ஏமாற்றி வரும் மோசடி கும்பலிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிர்வாகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது
இதுதொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, கிரிப்டோகரன்சி என்ற பெயரில் மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு ஜியோ சார்பாக எந்த மொபைல் ஆஃப்-ம் அறிமுகம் செய்யப்படவில்லை.

சில மோசடி கும்பல் ஜியோ பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த விவகாரத்தை ஜியோ நிறுவனம் முக்கியமானதாக எடுத்துக்கொண்டு இதற்கு காரணமான நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்து அதற்கான புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. டெலிகாம் சந்தையில் பல புரட்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்து மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், பல்வேறு வர்த்தக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதனை பயன்படுத்தி சில இணையகொள்ளையர்கள் இவ்வாறான பணியில் ஈடுபடுவதாக ரிலையன்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கிரிப்டோகரன்சி மீது முதலீட்டாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதால், ஜியோ நிறுவனம், விரைவில் கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்ய உள்ளதாக சமீபத்தில் இணையத்தில் தகவல் கசிந்தது. இதனையடுத்து வேறு எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஜியோகாயின் பெயரில் மோசடி கும்பல் கிரிப்டோகரன்சியை மக்களிடமிருந்து ஏமாற்றி வாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது
முகேஷ் அம்பானியின் மூத்த மகனாக ஆகாஷ் அம்பானி விரைவில், ரிலையன்ஸ் ஜியோ கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications