நீதி, நியாயம், வென்றுள்ளது... இப்போதான் நிம்மதியா இருக்கு.. ஹேப்பி மோடில் கனிமொழி!
நீதி நியாயம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என 2ஜி தீர்ப்பு குறித்து கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: நீதி நியாயம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என 2ஜி தீர்ப்பு குறித்து கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
2ஜி வழக்கில் இருந்து கனிமொழி எம்பி, ஆ ராசா, ராஜாத்தியம்மாள் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி சைனி தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பை திமுகவினர்ல கொண்டாடி வருகின்றனர். இனிப்புகள் வழங்கியும், வெடி வெடித்தும் ஆரவார முழக்கமிட்டு திமுகவினர் ஆனந்த கூத்தாடி வருகின்றர்.

கணவருடன் வந்த கனிமொழி
தீர்ப்பை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி தனது கணவர் அரவிந்தனுடன் காலையிலேயே நீதிமன்றத்திற்கு வந்துவிட்டார். அவருக்கு ஆதரவாக அழகிரி, திருச்சி சிவா, துரைமுருகன், டிஆர் பாலு உள்ளிட்ட பலரும் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர்.

14 பேரும் விடுவிப்பு
நாடே எதிர்ப்பார்த்த முக்கிய தீர்ப்பு என்பதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. 10.45 மணிக்கு தீர்ப்பை வாசித்த நீதிபதி கனிமொழி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி கனிமொழி 2ஜி வழக்கில் நீதி நியாயம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார். 2ஜி அலைக்கற்றை வழக்கை பொய் வழக்கு என திமுக கூறி வந்ததற்கு தீர்வு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

நிம்மதி கிடைத்துள்ளது
2ஜி வழக்கால் பெரிய அழுத்தம் இருந்த நிலையில் தற்போது நிம்மதி கிடைத்துள்ளது என்றும் கனிமொழி கூறினார். மேலும் 2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்தால் அதனை எதிர்கொள்ள தயார் என்றும் கனிமொழி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications