காவிரியில் தண்ணீர் தரக்கூடாது.. கையை பிளேடால் வெட்டி போராடிய கன்னட சங்கத்தினர் #TNNeedsKaveri
மைசூர்: காவிரி நதிநீரை திறந்துவிடுவதை எதிர்த்து கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது, ஒருவர் கையை வெட்டிக் கொண்டு ரத்தம் சிந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது.
மண்டியாவில் கஸ்தூரி ஜனபர வேதிகே, அமைப்பினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜெயலலிதா, சித்தராமையா, மோடி ஆகியோருக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
அப்போது, ஸ்ரீநிவாஸ் என்பர் தனது கையில் பிளேடால் வெட்டிக்கொண்டு, ரத்தம் வடிய, வடிய போராட்டம் நடத்த ஆரம்பித்தார். ரத்தம் கொடுத்தாலும் கொடுப்போம், காவிரியில் தண்ணீர் தர மாட்டோம் என அவர்கள் கோஷமிட்டனர்.
இதனால் மண்டியாவில் பரபரப்பு ஏற்பட்டது.