வெள்ள நிவாரணம்.. தமிழகத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவி, மருந்துகள்: கர்நாடக முதல்வர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: தமிழக வெள்ள நிவாரணத்திற்கு கர்நாடக அரசு ரூ.5 கோடி நிதி வழங்குவதோடு, மருந்துகளையும் அனுப்பி வைக்கும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

சென்னை நகரம் மழை வெள்ளத்தால் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது குறித்து சித்தராமையா இன்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மழை வெள்ளம் வருத்தம் தரக்கூடியது. மழை நிவாரணத்திற்காக தமிழக அரசிற்கு, கர்நாடகா ரூ.5 கோடி வழங்கும். அத்தோடு, தேவைப்படும் மருந்து பொருட்கள், போர்வை, துணி போன்ற நிவாரண பொருட்கள் கர்நாடகாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.
கர்நாடக தலைமைச் செயலாளரை, தமிழக அரசுடன், தொடர்புகொண்டு தேவைப்படும் ஒருங்கிணைப்பை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications