இந்தியாவில் ஃபேஸ்புக்-க்கு தடை விதிக்கனுமா? சவுதி விவகாரத்தில் எச்சரித்த கர்நாடகா ஹைகோர்ட்!
பெங்களூர்: சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஒத்துழைப்பு தர மறுப்பதால் இந்தியாவில் ஃபேஸ்புக்-க்கு தடை விதிக்க நேரிடும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் சைலேஷ்குமார் (வயது 52). சவுதி அரேபியாவில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை ஆதரித்து ஃபேஸ்புக் பக்கங்களில் சைலேஷ்குமார் பதிவிட்டிருந்தார். அதேநேரத்தில் சவுதி மன்னர் மற்றும் இஸ்லாம் மதத்துக்கு எதிராக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாக சைலேஷ்குமார் அந்நாட்டு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மங்களூர் போலீசில் சைலேஷ்குமாரின் மனைவி கவிதா ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், கணவர் சைலேஷ்குமார், சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாகத்தான் பதிவிட்டிருந்தார். ஆனால் அவரது பெயரில் போலி அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு இஸ்லாம் மதம் மற்றும் சவுதி அரசருக்கு எதிரான கருத்துகள் பதிவிடப்பட்டதாகவும் கூறியிருந்தார். இதனடிப்படையில் மங்களூர் போலீசார் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் விவரங்களைக் கேட்டிருந்தனர். இருப்பினும் ஃபேஸ்புக் நிர்வாகம் இவ்விவகாரத்தில் ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக சைலேஷ்குமார் மனைவி கவிதா தரப்பில் 2021-ல் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மேலும் கணவரை மீட்டுத் தர வேண்டும் என மத்திய அரசுக்கும் கவிதா கடிதம் அனுப்பி இருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, கணவர் சைலேஷ்குமார் பெயரில் போலி அக்கவுண்ட் யாரால் உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. மங்களூர் போலீஸ் விசாரணைக்கு ஃபேஸ்புக் நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என மீண்டும் தெரிவிக்கப்பட்டது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.தீக்ஷித் தலைமையிலான் பெஞ்ச் இவ்வழக்கு விசாரணையின் போது, மாநில போலீசாரின் விசாரணைக்கு ஃபேஸ்புக் நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி தராவிட்டால் இந்தியாவில் ஃபேஸ்புக் செயல்பாடுகளுக்கு தடை விதிக்க நேரிடும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்ததனர் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகள்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications