நாய்களுக்கு போடுவதை போல பசியால் தவித்த மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கியெறிந்த அமைச்சர்!
வெள்ளத்தில் பசியால் வாடிய மக்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்த அமைச்சருக்கு சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

பெங்களூரு: வெள்ளத்தில் பசியால் வாடிய மக்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்த அமைச்சருக்கு சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தீவிரம் அடைந்த தென் மேற்கு பருவமழை போதும் போதும் என்னும் அளவுக்கு கேரளாவிலும் கர்நாடகாவிலும் கொட்டித் தீர்த்துள்ளது. கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதால், மாநிலமே வெள்ளத்தின் நடுவில் தத்தளித்து வருகிறது.
இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, உண்ண உணவு கூட இன்றி தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகிறது.
|
கர்நாடகாவிலும் பாதிப்பு
உணவு உடைமையின்றி தவித்து வரும் மக்களுக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. இது போல் கர்நாடகாவிலும் வெள்ளம் ஏற்பட்டு மாநிலத்தின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பிஸ்கட் பாக்கெட்டுகள் வீச்சு
இந்த நிலையில் அவர்களை சந்தித்து உணவு வழங்க சென்ற கர்நாடக அமைச்சர் எச்.டி ரேவண்ணா எதோ நாய்களுக்கு ரொட்டி துண்டுகளை தூக்கி வீசுவதை போல, பொதுமக்களை நோக்கி பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கி வீசியுள்ளார்.

கடும் கண்டனம்
இதனை வீடியோவாக பதிவு செய்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அவருடைய இந்த மனிதாபிமானற்ற செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பேப்பர் படித்த குமாரசாமி
வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பாதித்த பகுதிகளை விட்டு விட்டு செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சர்சையில் சிக்கிய அண்ணன்
இந்நிலையில் முதல்வர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா இந்த நடத்தை மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சையில் சிக்கிய இருவரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications