கேஆர்எஸ் அணையை முற்றுகையிட முயற்சி- கன்னட விவசாயிகள் மீது போலீஸ் தடியடி #TNNeedsKaveri
மைசூரு: கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயற்சித்த கன்னட விவசாயிகளை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணராஜசாகர்(கேஆர்எஸ்), கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று 12 மணிநேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின் போது கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட நூற்றுக்கணக்கானோர் முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் தடையை மீறி அணையை நோக்கி செல்ல அவர்கள் முயற்சித்தனர். இதனால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
Lathicharge at KRS dam during #KarnatakaBandh for #NammaKaveri pic.twitter.com/vVCZz1RyqM
— T S Sudhir (@Iamtssudhir) September 9, 2016
கிருஷ்ணராஜசாகர் அணைப் பகுதியில் ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.