பெங்களூர் அருகே ஓடும் ரயிலில் தொங்கிய வாலிபருக்கு நேர்ந்த கதி.. பதற வைக்கும் வைரல் காட்சி
Recommended Video
பெங்களூர்: ஓடும் ரயிலில் தொங்கியபடி சாகசம் செய்த இளைஞர், கை நழுவி கீழே விழுந்து அடிபடும் காட்சிகள் செல்போனில் வீடியோவாக ரெகார்ட் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பெங்களூர் அருகே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நான்டட்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ கர்நாடகாவில் வைரலாக பரவியது. இப்போது நாடு முழுக்க பரவி வருகிறது.
சுமார் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரயில் பெட்டியின் பக்க வாட்டில் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி சாகசம் செய்கிறார். இதை சக பயணிகள், நண்பர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இதனால் ஆர்வத்தோடு இதை அவர் செய்து வந்தார். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு கை நழுவி அவர் கீழே விழுகிறார். விழுந்த வேகத்தில், பக்கவாட்டில் உடல் இழுத்து செல்லப்படுகிறது. அங்கே ஒரு பாறையும் காணப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அந்த வாலிபர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை ரயில் சக்கரங்களுக்குள் அவர் சிக்கியிருந்தால், நினைத்து பார்க்க முடியாத சோகம் அரங்கேயிருக்கும்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் ரயில் பயணிகள், அவசர கால சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தாமல் அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததும் பொறுப்பற்ற தன்மையையும், வேடிக்கை பார்க்கும் மனநிலையையும் எடுத்து காட்டுவதை போல உள்ளது.