"பாவம்னு தான் தமிழகத்துக்கு தண்ணி கொடுத்தோம்.. மீண்டும் கொடுப்போம்னு எதிர்பார்க்காதீங்க"-சித்தராமையா
பெங்களூரு : "தமிழகத்தில் மழையின்றி வறண்ட சூழ்நிலை நிலவுவதை மனதில் வைத்து தான், கபினி அணையிலிருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறதே தவிர, காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின்படி அல்ல,'' என, கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.
கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து, கடந்த மூன்று நாட்களாக, தமிழகத்துக்கு, 4,000 கன அடி தண்ணீர் விடப்படுகிறது. மேலும், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 4,476 கனஅடி தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கபினி அணையில் இருந்து தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் மேலும் ஆத்திரமடைந்துள்ளனர்.
விவசாயிகள் சங்கத் தலைவர், குருபுர சாந்த குமார் தலைமையில், மைசூரில் உள்ள நீர்ப்பாசன அலுவலகம் முன், விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பெங்களூரில், முதல்வர் சித்தராமையா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது...
தமிழகத்தில் மழையின்றி வறண்ட சூழ்நிலை நிலவுகிறது என்பதை மனதில் வைத்து தான், கபினி அணையிலிருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறதே தவிர, காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின்படி அல்ல.
எனினும், கர்நாடக விவசாயிகளின் நலனையும் நாங்கள் கவனிக்க வேண்டும். தற்போது, மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. எனவே, எதிர்வரும் நாட்களிலும் தமிழகத்துக்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications