35 வருஷங்களில் முதல்முறை.. ஒரே குரலில் காஷ்மீர்.. மசூதி ஒலிபெருக்கியில் பந்த் அறிவித்த முஸ்லிம்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு இன்று, கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரு முக்கிய காரணத்திற்காக முழுமையாக முடங்கியது. நேற்று பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் கொந்தளிப்பில் உள்ளதுதான் இதற்கு காரணம். தாக்குதலுக்கு எதிராக மக்கள் தாங்களாகவே வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளில் முதல்முறையாக, காஷ்மீர் ஒரு பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக ஒற்றுமையாக எழுந்து நிற்கிறது.
பஹல்காமில் சந்தைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 அப்பாவிகளில், சுற்றுலாப் பயணிகளுக்குக் குதிரை சவாரி செய்து கொடுத்து வந்த சையத் அதில் ஹுசைன் ஷாவும் ஒருவர். கொலைகாரர்களை எதிர்க்க முயன்றபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

"நான் ஒரு இந்தியன்" முழக்கங்கள்
பஹல்காமில் கடைக்காரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் இன்று கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது அவர்கள் "ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்" மற்றும் "நான் ஒரு இந்தியன்" என்று முழக்கமிட்டனர். அங்கே சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு 15 நாட்கள் வரை இலவச தங்குமிடம் உட்பட அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
ஹோட்டல் உரிமையாளர் ஆசிஃப் புர்ஜா இந்தத் தாக்குதலை "மனித குலத்திற்கு எதிரான குற்றம்" என்று தெரிவித்தார். "இது சுற்றுலா பற்றியது அல்ல, இது பொருளாதாரம் பற்றியது அல்ல, எங்கள் தலைகள் வெட்கத்தில் குனிகின்றன. சுற்றுலா வந்தவர்கள் தவறு என்ன? அவர்கள் இங்கு காஷ்மீரை நம்பி வந்துள்ளனர். நாங்கள் அவர்களின் குடும்பங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம்," என்று அவர் கூறினார்.
ராணுவத்திற்கு ஆதரவு
மற்றொரு போராட்டக்காரர், ராணுவத்தின் பதிலடி நடவடிக்கைக்குத் தாங்கள் முழுமையாக ஆதரவளிப்பதாகத் தெரிவித்தனர். ஒரு போராட்டக்காரர் கூறுகையில், "எங்களுக்குத் தேவைப்பட்டால், நாங்கள் ராணுவத்துடன் முழுமையாக இருப்போம். நாங்கள் இதைச் சகித்துக்கொள்ள மாட்டோம். உள்ளுக்குள் நாங்கள் வேதனைப்படுகிறோம். நாங்கள் மனிதர்கள். இது பணம் அல்லது வியாபாரம் பற்றியது மட்டுமல்ல. நேற்று கொல்லப்பட்ட 26 அப்பாவிகள்தான் மிகப் பெரிய இழப்பு.

சுற்றுலா ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்கிறது. பள்ளத்தாக்கு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அமைதியைக் கண்டிருந்தது, கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்தனர்; இந்தத் தாக்குதல் காலச்சக்கரத்தை பின்னோக்கித் தள்ளக்கூடும்," என்றார்.
உமர் அப்துல்லா கண்டனம்
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்தத் தாக்குதலை "அபாயகரமான" செயல் என்று கண்டித்துள்ளார். "இதை என்னால் நம்ப முடியவில்லை. எங்கள் விருந்தினர்கள் மீது நடந்த தாக்குதல் அருவருப்பானது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் மிருகத்தனமானவர்கள், மனிதாபிமானமற்றவர்கள் மற்றும் அருவருப்பானவர்கள். கண்டிக்க வார்த்தைகள் இல்லை. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தாக்குதல் பற்றிய செய்தி வெளியானதும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இன்று காலை, காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைத் தனது நிர்வாகம் செய்து வருவதாக உமர் அப்துல்லா கூறினார். நேற்று பஹல்காமில் நடந்த துயரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எங்கள் விருந்தினர்கள் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது, ஆனால் அதே நேரத்தில் மக்கள் ஏன் திரும்ப விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம் என்றார்.
"கூடுதல் விமானங்களுக்காக DGCA மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே உள்ள NH-44 சாலை ஒரு திசையில் மட்டும் போக்குவரத்துக்கு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வாகனங்கள் எளிதாகச் செல்ல ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே போக்குவரத்தைச் சீர் செய்யுமாறு நான் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன். பல இடங்களில் சாலை இன்னும் நிலையற்றதாக இருப்பதால், இது கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திட்டமிட்ட முறையில் செய்யப்பட வேண்டும், மேலும் அனைத்து சிக்கித் தவிக்கும் வாகனங்களையும் அகற்ற நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த நேரத்தில் வாகனங்களுக்கு முற்றிலும் தடையற்ற இயக்கத்தை எங்களால் அனுமதிக்க முடியாது, அனைவரும் எங்களுடன் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம்," என்றும் உமர் கூறினார்.
மெகபூபா முஃப்தி மன்னிப்பு
மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) தலைவர் மெகபூபா முஃப்தி, ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரினார். மெகபூபா தலைமையில், PDP தலைவர்களும் தொண்டர்களும் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் பூங்காவிற்கு அருகிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கூடி, அங்கிருந்து கண்டன ஊர்வலம் நடத்தினர்.
போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா, "இந்தத் தாக்குதல் அப்பாவிகளான சுற்றுலாப் பயணிகள் மீது மட்டுமல்ல, காஷ்மீரியத் மீதும் நடத்தப்பட்டது. நாட்டு மக்களிடம் நாங்கள் வெட்கப்படுகிறோம் என்று சொல்ல விரும்புகிறேன். காஷ்மீரிகளின் இதயங்கள் சோகமாக உள்ளன, இந்தத் துயர நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோருகிறோம்.
இது எங்கள் மீதான தாக்குதல், நாங்கள் இதைக் கண்டிக்கிறோம், இது பொறுத்துக்கொள்ளப்படாது. உள்துறை அமைச்சர் இங்கு வந்துள்ளார், அவர் இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளைக் கண்டறிய வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்க முடியும்," என்றார்.

பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்
மறுபுறம், இந்தத் தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும், பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாட்டிற்குத் திரும்பினார். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளவர்கள் தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்று மாலை 6 மணிக்கு பிரதமரின் தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் நடைபெற்றது. இதில், பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் பல முக்கிய முடிவுகளை எடுத்து அறிவித்துள்ளார். குறிப்பாக சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது அதில் ஒன்றாகும்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்குச் சென்று, உமர் அப்துல்லா மற்றும் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோருடன் நிலைமையை மறு ஆய்வு செய்துள்ளார்.
ராஜ்நாத் சிங் உறுதி
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன், இந்திய அரசு தேவையான ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கும். இதை நடத்தியவர்களை மட்டுமல்லாமல், திரைக்குப் பின்னால் இருந்து இந்திய மண்ணில் இதுபோன்ற கொடூரமான செயல்களைச் சதி செய்தவர்களையும் நாங்கள் பிடிப்போம். இந்தியா இவ்வளவு பழமையான நாகரிகம் மற்றும் பழமையான நாடு, இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களால் மிரட்ட முடியாது. இதற்குப் பொறுப்பானவர்கள் விரைவில் வலுவான பதிலடியைக் காண்பார்கள்," என்றார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications