காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல் – 11 நாட்களுக்குப் பின் மீட்பு!
அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் கிட்டதட்ட 11 நாட்களாக சிக்கித் தவித்த கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெகராவில் கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல் வீடு உள்ளது.
அவரது வீட்டுக்குள் 10 நாட்களுக்கு முன்னர் வெள்ள நீர் புகுந்தது. தகவல் தொடர்பு துண்டிப்பு காரணமாக உதவி எதுவும் கிடைக்காமல் அவர் அங்கு சிக்கியுள்ளார்.

தொலைத் தொடர்பு துண்டிப்பு:
இதுபற்றி மீட்கப்பட்ட ரசூல், " கடந்த 11 நாட்களாக தகவல் தொடர்பு துண்டிப்பு காராணமாக செல்போன்கள் இயங்கவில்லை. இன்டர்நெட் தொடர்பும் இல்லை.

உதவியற்ற நிலை:
இது எனக்கு மற்றும் எனது குடும்பத்திற்கு உதவியற்ற நிலையாகும். எங்கள் வீட்டின் கீழ்த்தளம் தண்ணீரில் மூழ்கியதால் நாங்கள் முதல் மாடிக்கு சென்று காத்திருந்தோம்.

பத்திரமாக மீட்பு:
மேலும், நாங்கள் பத்திரமாக உள்ளோம் என்று உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறுகையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் அணியின் கேப்டன்:
பர்வேஸ் ரசூல், ஜம்மு காஷ்மீர் ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.

2 கிலோ மீட்டரில் சிக்னல்:
"எனது வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் எனது தொலைபேசிக்கு சிக்னல் கிடைத்தது. வெள்ளம் காரணமாக எங்களுடைய அடையாளம் எதுவும் காணப்படவில்லை வதந்திகள் பரவியது எனக்கு தெரிய வந்தது.

இயல்பான சூழ்நிலை:
அது தவறானது. இந்த சூழ்நிலை மிகவும் கொடூரமானது. ஆனாலும், தற்போது அனந்த்நாக்கில் இயல்பான சூழ்நிலையே நிலவுகிறது. இரண்டு நாட்களுக்கு ஸ்ரீநகருக்கு வரத்திட்டமிட்டுள்ளேன்.

அணி வீரர்கள்
என்னால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஞ்சி கிரிக்கெட் அணியின் வீரர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை" என்று ரசூல் தெரிவித்துள்ளார்.

மீட்ட குழுவினர்:
இப்படி 11 நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூலை மீட்பு குழுவினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications