ஐந்து மாநில தேர்தல் எதிரொலி.. ஏழைகள், விவசாயிகள் மீது பாசத்தைக் கொட்டிய ஜேட்லி பட்ஜெட்!
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஊரகப் பகுதி மக்களுக்கு சாதகமான பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய அருண் ஜேட்லி கூறஉகையில், உணவுப் பாதுகாப்பு, வருவாய் பாதுகாப்பு ஆகியவற்றையும் தாண்டி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. விவசாயிகளின் வருவாயை 2022ம் ஆண்டுக்குள் நாம் இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளோம் என்றார்.

விவசாயிகள் நலனிற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 35,984 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார் ஜேட்லி. ஊரக வளர்ச்சிக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் ரூ. 87,765 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலின்போது இந்தியாவின் "9 தூண்களாக" ஜேட்லி வர்ணித்ததில் விவசாயமும், ஊரக வளர்ச்சியும் அடக்கமாகும்.
நீர்ப்பாசனத் துறைக்காக மட்டும் ரூ. 20,000 கோடியை அறிவித்துள்ளார் ஜேட்லி. இது நபார்ட் வங்கி மூலம் திரட்டப்படும்.
மேலும், கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு ரூ. 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி உதவியையும் அறிவித்துள்ளார் ஜேட்லி. கிராமப் பஞ்சாயத்துக்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு அளவு 228 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஊரகச் சாலைகள் மேம்பாட்டுக்கான மத்திய திட்டத்திற்காக ரூ. 19,000 கோடி செலவிடப்படும். மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்துக் கிராமங்களிலும் 100 சதவீத மின்சார வசதியை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ஜேட்லி கூறினார்.
மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் விவசாயம், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து வளர்ச்சி ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதை மனதில் வைத்து இந்த சலுகைகளை மத்திய அரசு அளித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications