ஐந்து மாநில தேர்தல் எதிரொலி.. ஏழைகள், விவசாயிகள் மீது பாசத்தைக் கொட்டிய ஜேட்லி பட்ஜெட்!
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஊரகப் பகுதி மக்களுக்கு சாதகமான பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய அருண் ஜேட்லி கூறஉகையில், உணவுப் பாதுகாப்பு, வருவாய் பாதுகாப்பு ஆகியவற்றையும் தாண்டி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. விவசாயிகளின் வருவாயை 2022ம் ஆண்டுக்குள் நாம் இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளோம் என்றார்.

விவசாயிகள் நலனிற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 35,984 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார் ஜேட்லி. ஊரக வளர்ச்சிக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் ரூ. 87,765 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலின்போது இந்தியாவின் "9 தூண்களாக" ஜேட்லி வர்ணித்ததில் விவசாயமும், ஊரக வளர்ச்சியும் அடக்கமாகும்.
நீர்ப்பாசனத் துறைக்காக மட்டும் ரூ. 20,000 கோடியை அறிவித்துள்ளார் ஜேட்லி. இது நபார்ட் வங்கி மூலம் திரட்டப்படும்.
மேலும், கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு ரூ. 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி உதவியையும் அறிவித்துள்ளார் ஜேட்லி. கிராமப் பஞ்சாயத்துக்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு அளவு 228 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஊரகச் சாலைகள் மேம்பாட்டுக்கான மத்திய திட்டத்திற்காக ரூ. 19,000 கோடி செலவிடப்படும். மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்துக் கிராமங்களிலும் 100 சதவீத மின்சார வசதியை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ஜேட்லி கூறினார்.
மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் விவசாயம், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து வளர்ச்சி ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதை மனதில் வைத்து இந்த சலுகைகளை மத்திய அரசு அளித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications