டெல்லியில் அரங்கேறுகிறது பாஜகவின் அழுக்கு அரசியல்: கெஜ்ரிவால் நற..நற..
டெல்லி: தேர்தலுக்கு பயந்து டெல்லியில் பாஜக கறை படிந்த அரசியல் நடத்துகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி சட்டசபையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக ஆட்சியமைக்க முன்வரவில்லை. எனவே ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து, ஆட்சியமைத்தன.

ஆனால் 49 நாட்களிலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால் கூட்டணியை உடைத்தார். பிப்ரவரி 14ம்தேதி அரசு கலைந்தும்கூட இன்னும் சட்டசபை கலைக்கப்படவில்லை. குடியரசு தலைவர் ஆட்சியும் அமலாகவில்லை.
இதனிடையே மைனாரிட்டி அரசு அமைக்க பாஜக முன்வந்துள்ளது. இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், ஆட்சியமைக்க போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாமல் ஒரு கட்சி எப்படி ஆட்சியில் அமர முடியும். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க இதற்கு முன்பு நான்கு முறை முயன்றது. இப்போது ஐந்தாவது முயற்சி நடக்கிறது.
இதற்கு பதிலாக டெல்லியில் தேர்தலை நடத்தி யாருக்கு மக்கள் ஆதரவு கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். தேர்தலை கண்டு அஞ்சி பாஜக கறைபடிந்த அரசியலை நடத்துகிறது. இவ்வாறு கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications