Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவிலும் வைகுண்டராஜன் 15,80,000 மெட்ரிக் டன் கனிம மணல் கடத்தல்: சி.பி.சி.ஐ.டி அறிக்கை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுவனம் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு 15,80,000 மெட்ரிக் டன் கனிம மணல் கடத்தியுள்ளதாக கேரள சி.பி.சி.ஐ.டி குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் தொட்டப்பள்ளி கடற்கரைக்கும், வலியயீக்கல் கடற்கரைக்கும் இடையே உள்ள 18 கிலோ மீட்டர் பரப்பு கனிம வளம் நிறைந்த பகுதியாகும்.

இத்தகைய கனிம மணல் முறைகேடாக அள்ளிச் செல்லப்படுவது குறித்து எழுந்த தொடர் புகார்களையடுத்து, இதுகுறித்து கேரள சிபிசிஐடி சிறப்புக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது.

Kerala C.B.C.I.D charge to Vaikundarajan for Sand smuggling

சிறப்புக்குழுவின் விசாரணை அறிக்கையில், சட்டவிரோதமாக கனிம மணல் அள்ளப்படும் சம்பவங்களின் பின்னணியில் தமிழகத்தைச் சேர்ந்த வி.வி. மினரல்ஸ் நிறுவனம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

1999-2006 ஆம் ஆண்டில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு 15,80,000 மெட்ரிக் டன் கனிம மணல் கடத்தப்பட்டதாகவும், இந்த கனிம மணல் கடத்தலில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ஈடுபட்டதாகவும் கேரளா சி.பி.சி.ஐ.டி வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கனிமமணல் கடத்தல் பல மட்டங்களில் நடக்கிறது. கடற்கரையோரம் இருப்பவர்கள் சாக்கு மூட்டையில் கனிம மணலை அள்ளி வீடுகளில் பதுக்கிவைக்கின்றனர் என்றும், அவர்களிடம் இருந்து இரண்டாம் நிலை கடத்தல் தரகர்கள் சிறிய வகை வாகனங்களின் மூலம் மறைவிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் மூலம், சட்ட விரோதமாக கடத்தப்படும் கனிம மணல் தமிழகத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

போதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்படாததால் பத்தனம்திட்டா நெடுஞ்சாலை வழியாகவும் மீன் பிடி படகுகளின் மூலமாக கனிம மணல் கடத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரிமணல் என்று அழைக்கப்படும் கடற்கரையோர கனிம மணல் விதிகளுக்குப் புறம்பாக கடத்தப்படுவதைத் தடுக்க கேரளா அரசு உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்கக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனிம மணல் முறைகேடு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, கனிம மணல் முறைகேடுகளுக்கு கேரளா துணை போகாது என்றும், முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருதலைப்பட்ச அறிக்கை

இதனிடையே கனிம மணல் முறைகேடு தொடர்பான கேரளா சி.பி.சி.ஐ.டி.யின் குற்றச்சாட்டை வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. விசாரணை அதிகாரி ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும், எங்களது விளக்கத்தை கேட்காமல் சி.பி.சி.ஐ.டி விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க கேரள நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளதாக வி.வி.மினரல்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் சகாயம் தலைமையிலான குழுவின் கனிம மணல் கடத்தல் தொடர்பான விசாரணைகள் சூடுபிடிக்க உள்ள நிலையில் கேரளா சி.பி.சி.ஐ.டி போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+