ஓணம் கொண்டாடுங்கள்.. வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவுங்கள்.. பினராயி விஜயன் வாழ்த்து
ஓணம் பண்டிகையை கொண்டாடுங்கள் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம் : கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று முதலமைச்சர் விடுத்துள்ளார்.
பிரளயம் என பெருக்கெடுத்து வந்த வெள்ளம் மாநலித்தை புரட்டி போட்டது. 380-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் நிலச்சரிவில் சிக்கி மாயமானதாகவும் கூறப்படுகிறது. இதைத்தவிர கட்டிடங்கள், வீடுகள், என அனைத்துமே தரைமட்டமானது. மரங்களும், மின்கம்பங்களும் சாலைகளில் அடியோடு சாய்ந்தன. மிதந்து கிடந்த பல விலங்குகள் காப்பாற்றப்பட்டாலும், ஏராளமான விலங்குகள் செத்து மிதந்தன.

நீண்ட ஆதரவு கரம்
வெள்ளத்தினால் மாநிலமே தவித்து தத்தளித்தபோது, உதவி செய்ய வாருங்கள் என பினராயி விஜயனின் ஒரு குரலுக்கு உலக மக்கள் கட்டுப்பட்டு தங்களால் முடிந்ததை, இயன்றதை அளித்து உதவ வந்தார்கள். கேரள மக்களை தங்கள் உடன்பிறப்புகளாய் நினைத்த உலகின் கடைகோடி மக்களும் ஆதரவு கரம் நீட்டினார்கள். இந்நிலையில்தான், அதாவது கடந்த வாரம் முதல்வர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த வருடம் ரத்து
வெள்ளப்பெருக்கு காரணமாக கேரள மாநிலத்தின் பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாவும், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு செலவிடும் தொகையை வெள்ள நிவாரண பணிகளுக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு அனைத்து தரப்பிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது.

சாதனை படைப்போம்
வந்து சேர்ந்த நிதியுதவிகள், பல கட்ட மீட்பு பணிகள் அரங்கேறியதன் பின்னர், தற்போதுதான் அம்மாநிலம் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பினராயி விஜயன் மீண்டும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி ஓணம் கொண்டாட வேண்டும் என்று அவர் தம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்து மீண்டு வந்ததை போல, மறுகட்டமைப்பிலும் சாதனை படைப்போம் என்றும் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.

மகாபலி சக்ரவர்த்தி வருவார்
ஒட்டுமொத்த சோகத்திலும் இழையோடியுள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை எப்படி கொண்டாட போகிறார்களோ தெரியாது. ஆனால் போராட்ட குணமும், உறுதியான பிடிப்பும் உள்ள கேரள மக்கள் விரைவிலேயே இந்த இக்கட்டான நெருக்கடியில் இருந்து தங்களை விடுவித்து கொள்வதுடன், மகாபலி சக்கரவர்த்தியை எதிர்கொண்டு வரவேற்பார்கள் என நம்பலாம்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications