சோலார் பேனல் வழக்கு... கேரள அரசியல் வரலாற்றில் முதல் முறை ஆஜரான முதல்வர் உம்மன்சாண்டி!
திருவனந்தபுரம்: கேரள அரசியல் வரலாற்றில் முதல்முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகி 14 மணிநேரம் சாட்சியம் அளித்துள்ளார் முதல்வர் உம்மன் சாண்டி.
வீடுகளில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் பேனல்களை சப்ளை செய்வதாக கூறி, கேரளாவில் ஏராளமானோரை ஒரு தனியார் நிறுவனம் ஏமாற்றியது. கடந்த 2013-ம் ஆண்டு வெடித்த இந்த ஊழல் தொடர்பாக, பிஜு ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட அரசின் மேல்மட்டத்தில் இருப்பவர்களின் பெயரைச் சொல்லி மோசடியில் ஈடுபட்டதால், இந்த விவகாரம் அரசியல்ரீதியாக பரபரப்பை உண்டாக்கியது.
முதல்வர் அலுவலக ஊழியர்கள் டென்னி ஜோப்பன், ஜிக்குமோன் ஆகியோருக்கு சரிதா நாயருடனான தொடர்பு அம்பலமானது. இதனால், உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷன், கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி அமைக்கப்பட்டது. இந்த கமிஷன், சாட்சியங்களை சேகரித்து வருகிறது. இந்த வேலைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
இந்த நிலையில் முதல்வர் உம்மன் சாண்டியிடம் விசாரணை நடத்த இந்த கமிஷன் முடிவு செய்து, அவருக்கு ‘சம்மன்' அனுப்பியது.
அதை ஏற்று, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் விசாரணை கமிஷன் முன்பு நேற்று முன்தினம் காலையில் உம்மன் சாண்டி ஆஜரானார். அங்கு சாட்சியம் அளித்தார். அதையடுத்து, அவரிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது.
அப்போது, தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்ற யோசனைக்கு உம்மன் சாண்டி எதிர்ப்பு தெரிவித்தார்.
‘உண்மை கண்டறியும் சோதனைக்கு என்ன அவசியம்? நான் உண்மையைத்தான் பேசுகிறேன். எந்த தவறும் செய்யவில்லை. நான் தவறு செய்ததாக யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். என் மீதான குற்றச்சாட்டுகள், அரசியல் உள்நோக்கம் கொண்டவை,' என்று விசாரணை கமிஷன் முன்பு உம்மன் சாண்டி கூறினார்.
அவரிடம் நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய விசாரணை, நேற்று அதிகாலை முடிவடைந்தது. மொத்தம் 14 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications