சோலார் பேனல் வழக்கு... கேரள அரசியல் வரலாற்றில் முதல் முறை ஆஜரான முதல்வர் உம்மன்சாண்டி!
திருவனந்தபுரம்: கேரள அரசியல் வரலாற்றில் முதல்முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகி 14 மணிநேரம் சாட்சியம் அளித்துள்ளார் முதல்வர் உம்மன் சாண்டி.
வீடுகளில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் பேனல்களை சப்ளை செய்வதாக கூறி, கேரளாவில் ஏராளமானோரை ஒரு தனியார் நிறுவனம் ஏமாற்றியது. கடந்த 2013-ம் ஆண்டு வெடித்த இந்த ஊழல் தொடர்பாக, பிஜு ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட அரசின் மேல்மட்டத்தில் இருப்பவர்களின் பெயரைச் சொல்லி மோசடியில் ஈடுபட்டதால், இந்த விவகாரம் அரசியல்ரீதியாக பரபரப்பை உண்டாக்கியது.
முதல்வர் அலுவலக ஊழியர்கள் டென்னி ஜோப்பன், ஜிக்குமோன் ஆகியோருக்கு சரிதா நாயருடனான தொடர்பு அம்பலமானது. இதனால், உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷன், கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி அமைக்கப்பட்டது. இந்த கமிஷன், சாட்சியங்களை சேகரித்து வருகிறது. இந்த வேலைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
இந்த நிலையில் முதல்வர் உம்மன் சாண்டியிடம் விசாரணை நடத்த இந்த கமிஷன் முடிவு செய்து, அவருக்கு ‘சம்மன்' அனுப்பியது.
அதை ஏற்று, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் விசாரணை கமிஷன் முன்பு நேற்று முன்தினம் காலையில் உம்மன் சாண்டி ஆஜரானார். அங்கு சாட்சியம் அளித்தார். அதையடுத்து, அவரிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது.
அப்போது, தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்ற யோசனைக்கு உம்மன் சாண்டி எதிர்ப்பு தெரிவித்தார்.
‘உண்மை கண்டறியும் சோதனைக்கு என்ன அவசியம்? நான் உண்மையைத்தான் பேசுகிறேன். எந்த தவறும் செய்யவில்லை. நான் தவறு செய்ததாக யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். என் மீதான குற்றச்சாட்டுகள், அரசியல் உள்நோக்கம் கொண்டவை,' என்று விசாரணை கமிஷன் முன்பு உம்மன் சாண்டி கூறினார்.
அவரிடம் நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய விசாரணை, நேற்று அதிகாலை முடிவடைந்தது. மொத்தம் 14 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications