கொடூர பலாத்காரத்துக்குள்ளாகி கொலையான தலித் மாணவி.. கேரளாவில் கொந்தளிப்பு!
கொச்சி: கேரளாவில் 30 வயது தலித் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் குரல்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இருவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாவூரை சேர்ந்த ஜிஷா(30) என்ற தலித் சமூகத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குடலை உருவி கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 30 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது.
இந்த சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2 பேர்
ஜிஷா கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை பிடித்துள்ளனர். ஆனால் அவர்கள் தான் ஜிஷாவை கொலை செய்தார்களா என்பது தெரியவில்லை. விசாரணை குறித்த தகவல்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.

உம்மன் சாண்டி
ஜிஷாவின் கொலை குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

வழக்கு
ஜிஷா கொலையை கண்டித்து மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மாநிலம் முழவதும் கண்டன பேரணி நடத்தினர். இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான கேரள மாநில ஆணையம் தானாக முன்வந்து ஜிஷா விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

மனித உரிமை ஆணையம்
மீடியாக்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் கேரள மாநில மனித உரிமை ஆணையமும் தானாக முன் வந்து ஜிஷா கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் ஜிஷா வழக்கு விசாரணையை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்குமாறும் அது வலியுறுத்தியுள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications