கோழிக்கோடு விமான விபத்து... புதிய தகவல்.. இதனால் விபத்தா?
கோழிக்கோடு: கோழிக்கோட்டில் நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரன்வே துவங்குவதற்கு ஆயிரம் அடிக்கு முன்னராகவே தரையிறங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கன மழை பெய்து கொண்டு இருந்த காரணத்தால் விமான ஓட்டியால் ரன்வேயை கண்டறிய முடியவில்லை. இதனால் ரன்வேக்கு முன்னரே தரை இறக்கி, அதன் பின்னர் விபத்தை சந்தித்துள்ளது.
Recommended Video
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முயற்சித்தது. அப்போது கன மழை பெய்து கொண்டு இருந்தது. விமான ஓட்டிக்கு ரன்வே தெரியவில்லை. இதனால் விமானத்தை இறக்காமல் இரண்டு முறை வானத்தில் வட்டம் அடித்துள்ளார்.

முதலில் ரன்வே எண் 28ல் இறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், அங்கு இறங்க முடியாத காரணத்தினால் ரன்வே எண் 10ல் இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான தள கட்டுப்பாட்டு அறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''ரன்வே 10 துவங்குவதற்கு முன்பு ''டேக்ஸிவே சி'' உள்ளது. இது ரன்வே 10ல் இருந்து ஆயிரம் மீட்டருக்கு முன்பே உள்ளது. தரையிறங்கும் முன்பு இந்த இடத்தில் விமானம் தரையிறங்கியுள்ளது. அதாவது டேபிள்டாப் தளத்தில் இறங்காமல், அதற்கு முன்னதாக இறங்கியுள்ளது. இந்த ஓடுதளத்தின் நீளம் 2,700 மீட்டர். விமானம் இறங்கும்போது கன மழை பெய்து கொண்டு இருந்தது. 2000 மீட்டர் வரை மட்டுமே, பார்வை கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இறங்கிய விமானம் இரண்டாக உடைவதற்கு முன்பு அருகில் இருக்கும் 35 அடி சரிவில் இறங்கியுள்ளது. இதையடுத்து இரண்டாக உடைந்துள்ளது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications