கேரளாவில் கல்லூரி மாணவிகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணியத்தடை!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் மாணவிகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் பேண்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஜீன்ஸ் பேண்ட் அணிவது என்றால் ஆவல் அதிகம்தான். ஆண்களும் பெண்களும் ஜீன்ஸ் மீது அலாதியான மோகம் கொண்டுள்ளனர். விலை எவ்வளவாக இருந்தாலும் அதை வாங்கத்தவறுவதில்லை. அது நாகரிகத்தின் அடையாளமாகவும், கவுரவமிக்கதாகவும் ஆகிவிட்டது என்றும் கூறுகிறார்கள் சில பெண்கள்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வகுப்பிற்கு வருகை சரியான சதவீதத்தில் இருக்க வேண்டும் என்றும் இன்டர்னல் மதிப்பெண் அதைப்பொறுத்து வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஃபார்மல் உடை அணிந்துவரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.
அதில் மாணவர்கள் ஃபார்மல் உடை அணிந்து, ஷூ போடவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்றும், சுடிதார் அல்லது புடவை தான் உடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் தலை முடியை சரியாக பின்னவேண்டும் என்றும், லெக்கின்ஸ் அணியக்கூடாது, சத்தம் எழுப்பும் ஆபரணங்கள் அணியக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட் அணிய தடை செய்யப்பட்டது. இது ஒரு புறம் இருக்க பஸ்களில் ஏறி, இறங்கவும், வாகனங்களை இயக்கவும் ஜீன்ஸ் சவுகரியமாக இருக்கிறது என்று கல்லூரி மாணவ, மாணவிகள் கூறுகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications