லிபியத் தீவிரவாத தாக்குதலில் சிக்கி கேரள நர்ஸ் கைக்குழந்தையுடன் பலி
திருவனந்தபுரம்: உள்நாட்டுப்போர் நடந்து வரும் லிபியாவில் ராக்கெட் தாக்குதலில் சிக்கி கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் தனது கைக்குழந்தையுடன் உயிரிழந்துள்ளார்.
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று லிபியா. இங்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனால், அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், சில பகுதிகள் தீவிரவாதிகளின் பிடியிலும் உள்ளன.

இதில், தீவிரவாதிகள் பிடியில் உள்ள பகுதியில் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் இயங்கி வருவதால், அவற்றிற்குள்ளேயே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம். அந்தவகையில், நேற்று முன்தினம் நடந்த திடீர் ராக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் சுனு சத்யன் (29) தனது ஒன்றரை வயது மகன் பிரணவ்வுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வெல்லியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனு. இவரது கணவர் பெயர் விபின் குமார். இவர்கள், சப்ரதா நகரில் லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜவையா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர்.












Click it and Unblock the Notifications