கேரளாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு.. 14 மாவட்டங்களிலும் ரெட் அலர்ட்
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெரியாறு அணையின் கரையோரம் அமைந்துள்ள கொச்சி சர்வதே விமான நிலையம் வரும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிவரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கொச்சியில் இன்று காலை நிலவரப்படி 11 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் "மாநிலம் முழுக்க 1067 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு ஒன்றரை லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்