ஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்
Recommended Video
கொச்சி: கொச்சி அருகே திருவாங்குளம் பகுதியில் அடுத்தடுத்து கடைகளில் திருடிய கொள்ளையன், ராணுவ வீரரின் வீட்டில் மட்டும் திருடவில்லை. ஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. என திடீர் ஞானோதயமாக சுவரில் எழுதிவிட்டு சென்றிருக்கிறான்.
கொச்சி அருகே திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் 5 கடைகளில் பொருட்களை திருடன் ஒருவன் நைசாக புகுந்து கொள்ளையடித்து உள்ளான்.
அதன்பிறகு வீடுகளில்திருட நினைத்த அவன் அந்த பகுதியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் ஐசக் மணி என்பவர் வீட்டின் பின்புற கதவை உடைத்து நுழைந்திருக்கிறான்.

தெரியாமல் நுழைந்தேன்
அங்கு சென்ற அவனுக்கு ராணுவ வீரரின் வீடு என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு திருட மனமில்லாமல்,. சுவரில் மலையாளத்தில் சில வரிகளை எழுதிவிட்டு சென்றுள்ளான். அதில் "இது ராணுவ வீரரின் வீடு என்பது தெரியாமல் நுழைந்துவிட்டேன். கடைசி நேரத்தில் தான் ராணுவ வீரரின் வீடு என்பது எனக்கு தெரியவந்தது.

தெரியாமல் உடைத்துவிட்டேன்
ராணுவ வீரரின் தொப்பியை வைத்து தான் இது ராணுவ வீரரின் வீடு என்பதையே நான் கண்டுபிடித்தேன். தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். பைபிளில் 7வது கட்டளையை மீறி விட்டேன். ராணுவ அதிகாரி அவர்களே என்னை மன்னித்து விடுங்கள்" இவ்வாறு திருடன் விசித்திரமாக எழுதியிருக்கிறான்.

மதுவை தேடினான்
ராணுவ வீரரின் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் எதுவும் இல்லை. எனினும் வீட்டில் எந்த பொருளையும் திருடன் திருடவில்லை. ராணுவ வீரரின் வீடு என்றால் கண்டிப்பாக மது இருக்கும் என்று தேடிய திருடன் பீரோவில் இருந்து ஒரு பாட்டிலில் இருந்த மதுவை கொஞ்சம் ஊற்றி குடித்துவிட்டு சென்று இருக்கிறான்.

விசித்திர திருடன்
இதற்கிடையே அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் கொள்யைன் திருடி சென்றதால் கொச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராணுவ வீரரின் வீடும் திறந்து கிடக்கிறதே என்று எண்ணி உள்ளே சென்று பார்த்த போது தான் திருடன், சுவற்றில் மலையாளத்தில் மன்னிக்குமாறு எழுதியது தெரியவந்தது. அந்த ராணுவ வீரர் வெளிநாடு சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அந்த விசித்திர திருடனை தேடிவருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications