சபரிமலை: லட்சக்கணக்கில் பக்தர்கள்! திணறும் நிர்வாகம்- தரிசன நேரம் நீட்டிப்பு- விழிபிதுங்கும் கேரளா!
பம்பை: சபரிமலையில் வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து கேரளா உயர்நீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலத்தில்தான் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவர். பம்பை நதிக்கரையில் இருந்தே பக்தர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு பின்னர் படிப்படியாக மலை ஏற அனுமதிப்பர். வழக்கமான கூட்டம் இருக்கும் காலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படாது. அப்பச்சி மேடு, சரங்குத்தி தாண்டி சன்னிதானத்தை நெருங்கும் போது கியூவில் பக்தர்கள் நிறுத்தப்பட்டு பகுதி பகுதியாக தரிசனத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் கேரளா உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்களை தொடர்ந்து பிறப்பித்து வருகிறது. பக்தர்கள் சரங்குத்தி பகுதியிலேயே கியூவில் ஒழுங்குபடுத்தப்பட்டு தரிசனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சராசரியாக தரிசனத்துக்காக 14 மணிநேரம் முதல் 16 மணிநேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
சபரிமலையில் மலை ஏறும் போது நெரிசல், மூச்சு திணறலால் தமிழக சிறுமி பத்மா ஶ்ரீ நேற்று மரணம் அடைந்தது பெரும் துயரை ஏற்படுத்தியது. இதனால் முதியவர்கள், குழந்தைகளுக்கு தனி வரிசை உருவாக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் இந்த வரிசைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் தேவசம் போர்டு நிர்வாகம் செய்வதறியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும் பக்தர்களின் தரிசன நேரத்தையும் தற்போது நீட்டித்துள்ளனர். இரவு 11 மணி வரையில் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளலாம். அதிகாலையில் 3 மணி முதலே பக்தர்கள் தரிசனத்துக்கும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இருமுடி கட்டிச் சென்ற பக்தர்கள் பாதிவழியிலேயே இதுவரை இல்லாத வகையில் திரும்புகிற நிலைமையும் உருவாகி இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். குழந்தைகள், முதியவர்களுடன் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் மிக மிக கவனமாக பயணம் மேற்கொள்ளவும் தரிசனத்தின் போது பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டும் வருகின்றனர். கேரளா மாநில உயர்நீதிமன்றமும் அடுத்தடுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் விவரங்களை தேவசம் போர்டு நிர்வாகத்திடம் கேட்டுப் பெற்று வழிகாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications