கர்நாடகா மாநிலம் உத்தரஹள்ளியில் கேர் சங்கராந்தி கோலாகல கொண்டாட்டம்
கர்நாடக மாநிலம் உத்தரஹள்ளியில் கேர் சங்கராந்தி கடந்த சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரும்பு மற்றும தானியங்களை வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக மாநிலம் உத்தரஹள்ளியில் கேர் சங்கராந்தி நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ண கோலமிட்டு செங்கரும்பு மற்றும நவதானியங்கள் வைத்து வாசலில் வழிபாடு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் பொங்கல் திருநாள் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தை முதல் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படும் நிலையில் வட மாநிலங்களில் அந்த நாள் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் உத்தரள்ளி ஏரிப்பகுதியில் கடந்த 14ஆம் தேதி கேர் சங்கராந்தியாக கொண்டாடப்பட்டது. இதற்காக வாசலில் வண்ண கோலமிட்டு, செங்கரும்பு தானியங்கள் வைத்து மக்கள் கேர் சங்கராந்தியை கொண்டாடினர். இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications