கொல்கத்தா துறைமுகத்துக்கு ஷியாமா பிரசாத் முகர்ஜி பெயரை சூட்டினார் பிரதமர் மோடி- மமதா புறக்கணிப்பு
கொல்கத்தா: வரலாற்று சிறப்பு வாய்ந்த கொல்கத்தா துறைமுகத்துக்கு பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரை பிரதமர் மோடி சூட்டினார். இந்நிகழ்ச்சியை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புறக்கணித்துள்ளார்.
கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். கொல்கத்தா நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

கொல்கத்தா துறைமுகத்தின் வரலாற்றில் இன்று மிகவும் முக்கியமான நாள். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் இந்தியாவின் வளர்ச்சியிலும் கொல்கத்தா துறைமுகம் மிக முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறது.
இத்துறைமுகம் இனி டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரால் அழைக்கப்படும். இந்தியாவின் தொழில்துறை, ஆன்மீகம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது கொல்கத்தா துறைமுகம். இதன் 150-வது ஆண்டு விழாவை கொண்டாடும் போது இந்தியாவின் சக்தி வாய்ந்த அடையாளமாக இதை உருவாக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவி வருகிறது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி அமுல்படுத்தவில்லை. இத்திட்டத்தில் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக ஹெளராவில் பேளூர் மடத்தில் பேசிய பிரதர் மோடி, குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக நாட்டு மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன என்றார். ஆனால் கொல்கத்தா துறைமுக நிகழ்ச்சியில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை.
இந்நிகழ்ச்சியை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புறக்கணித்தார். மேலும் கொல்கத்தாவில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இன்றும் பேரணி நடைபெற்றது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications