கேஎஸ்ஆர்டிசிக்கு ரூ.22 கோடி போண்டி.. கலவரத்தால் வந்த வினை.. கவலையில் கர்நாடகா!
பெங்களூரு: தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் வெறித்தனமாக தாக்கி தீ வைத்து எரித்ததன் விளைவையும், நஷ்டத்தையும் இன்று கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக நிறுவனம் சந்தித்து வருகிறது. கேஎஸ்ஆர்டிசி எனப்படும் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு இதுவரை ரூ. 22 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
கர்நாடகத்தில் தமிழக வாகனங்களைக் குறி வைத்துத் தாக்கியதன் எதிரொலியாக தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் குறி வைக்கப்பட்டன. இருப்பினும் கர்நாடகத்தைப் போல இல்லாமல் தமிழகத்தில் பிரச்சினை ஏற்பட்ட வேகத்தில் முடிவுக்கு வந்து விட்டது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்திற்குள் வருவதில்லை. அதேபோல தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகத்திற்குள் செல்லாமல் உள்ளன.

செம நஷ்டம்
இதன் காரணமாக கேஎஸ்ஆர்டிசி நிறுவனத்திற்கு ரூ. 22 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாம். இப்படியே நிலைமை தொடர்ந்தால் மிகப் பெரிய சிரமத்தைச் சந்திக்க நேரிடும் என்று கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல்
அடுத்த வாரத்திலிருந்து தமிழகத்திற்கு தனது சேவையை மீண்டும் தொடங்க கேஎஸ்ஆர்டிசி திட்டமிட்டுள்ளதாம். இருப்பினும் சுப்ரீம் கோர்ட் இன்று முக்கியத் தீர்ப்பை அறிவிக்கவுள்ளதால் அதைப் பொறுத்தே சேவை தொடங்குவது முடிவு செய்யப்படுமாம்.

செப்டம்பர் 5 முதல்
செப்டம்பர் 5ம் தேதி முதல் கேஎஸ்ஆர்டிசி பஸ்கள் தமிழகத்திற்குள் வராமல் உள்ளது. இதுகுறித்து கேஎஸ்ஆர்டிசி பொது மேலாளர் விஸ்வநாத் கூறுகையில், ஓசூர் சாலையில் அத்திபலே, கனகபுரா சாலை மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டத்திதல் பந்திப்பூர் வரை மட்டுமே தற்போது எங்களது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து தமிழகத்திற்கு மக்கள் நடந்து போய் தமிழக அரசுப் பேருந்துகளில் ஏறிச் செல்கிறார்கள். அதேபோல தமிழக அரசுப் பேருந்துகளும் அவர்களது எல்லையுடன் நிற்கின்றன என்றார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவைப் பொறுத்து
கேஎஸ்ஆர்டிசி விஜிலன்ஸ் இயக்குநர் பிஎன்எஸ் ரெட்டி கூறுகையில், அடுத்த வாரத்திலிருந்து பஸ்களை இயக்க உத்தேசித்துள்ளோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவைப் பொறுத்து உள்ளது. சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தால் பஸ்கள் மீண்டும் சேவையைத் தொடங்கும் என்றார் ரெட்டி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications