ஆமா... சிஎன்என் - ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது விழாவில் குஷ்புவுக்கு என்ன வேலை?
'சிஎன்என் - ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது விழாவில் நான்' இப்படி ஒரு ஸ்டேடஸ் போட்டு, தனது க்ளோஸ் அப் படத்தை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டிருக்கிறார் நடிகையும் காங்கிரஸ் பேச்சாளருமான நடிகை குஷ்பு.
இதைப் பார்த்த பலரும், காங்கிரஸில் சேர்ந்ததற்காகத்தான் குஷ்புவுக்குதான் சிறந்த இந்தியருக்கான விருது வழங்கப்பட்டுவிட்டதோ என பதறிப் போய் கூகுளைத் தட்ட ஆரம்பித்துவிட்டனர்.
அப்புறம்தான் தெரிந்தது குஷ்பு இந்த விழாவுக்குப் பார்வையாளராகப் போய் மேடையில் விருது பெற்றவர்களுடன் நின்று போஸ் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

இந்த விழாவில் சிறந்த இந்தியர் 2014-க்கான விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது இஸ்ரோ குழுவுக்கும், மிகச் சிறந்த சாதனையாளர் விருது தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி மற்றும் கைலாஷ் சத்யார்த்திக்கும் வழங்கப்பட்டது.
சாதனையாளருக்கான சிறப்பு விருது கங்கனா ரணவத்துக்கும், மக்கள் தேர்வு விருது கே சந்திரசேகரராவ் மற்றும் பி விஜயனுக்கும், விளையாட்டுத் துறை சாதனையாளர் விருது ஜிது ராய்க்கும், வர்த்தகத் துறை சாதனையாளருக்கான விருது சந்திரசேகனுக்கும், பொழுதுபோக்குத் துறை சாதனையாளர் விருது சேதன் பகத்துக்கும், பொது சேவையில் சாதனை புரிந்தவருக்கான விருது டோங்கம் ரினாவுக்கும், அரசியலில் சாதனையாளருக்கான விருது அருண் ஜெட்லிக்கும், சர்வதேச இந்திர் விருது சத்யா நாதெல்லாவுக்கும் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications