பாஜக ராம்நாத் கோவிந்த், தலித் அல்ல என்று லாலு பிரசாத் கூறியதுதான் சிபிஐ ரெய்டுக்குக் காரணமா?
பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தலித் அல்ல என்று கூறிய இரண்டு நாட்களில் லாலு வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற கேள்வியை எழுப
பாட்னா: ஆர்ஜேடி கட்சித் தலைவரும் முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இது, அவர் 'மீரா குமார் பீகாரின் மகள்', 'ராம்நாத் கோவிந்த் தலித் அல்ல' என்று கூறியதன் எதிர்வினையாக சிபிஐ சோதனை நடத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆர்ஜேடி கட்சித் தலைவரும் முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிராசாத்துக்கு சொந்தமான 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இருதினங்களுக்கு முன்பு பாட்னாவில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் 21ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் சிறப்புரை ஆற்றிய லாலு, மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

2019-ல் நாடாளுமன்றம் நமதே
பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து 2019ஆம் ஆண்டு நடக்கிவிருக்கும் நாடாளுமன்றத்தில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என லாலு வலியுறுத்திக் கூறினார்.

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை
மேலும் நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவி வருகிறது என்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் ஊடகங்களும் எதிர்க்கருத்துகள் கூறினால் அவர்கள் உடனே அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் மிகக் கடுமையாக மத்திய அரசை சாடினார்.

ராம்நாத் தலித்தே அல்ல
மேலும், பாஜக முன்னிறுத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தலித் அல்ல. அவர் குஜராத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் எனவும், காங்கிரஸ் வேட்பாளரான மீராகுமார் பீகார் மண்ணின் மகள் எனவும் தெரிவித்தார்.

அச்சுறுத்துகிறதா மத்திய அரசு?
ஆர்ஜேடி கட்சி விழாவில் லாலு மத்திய அரசையும் பாஜக முன்னிறுத்திய வேட்பாளர் குறித்தும் விமர்சித்த இரண்டு நாட்களில் லாலு வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்துவது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்குத்தான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications