மலை முழுங்கி நில ஆக்கிரமிப்பு.. பதவியை விட்டு ஓடிய அமைச்சர்.. இங்கல்ல கேரளத்தில்!
நில ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கிய அமைச்சர் தாமஸ் சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் போக்குரவரத்து துறை அமைச்சர் தாமஸ் சாண்டிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கேரள மாநிலத்தில் குட்டநாடு தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாமஸ் சாண்டி. அவர் பினராயி விஜயன் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

ஆலப்பழா மாவட்ட ஆட்சியர் அனுபமா கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில் மார்தாண்டம் ஏரியில் உள்ள பெரும்பாலான இடத்தை சொகுசு விடுதி கட்டுவதற்காக அமைச்சர் தாமஸ் சாண்டிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.
அதில் அந்த இடத்துக்கு அருகில் இருந்த விளை நிலத்தை சொகுசு விடுதிக்கு வரும் வாகனங்களை நிறுத்துமிடமாக பயன்படுத்துவதற்காக சமன் செய்துவிட்டார் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து அமைச்சருக்கு நோட்டீஸும் அனுப்பினார்.
இந்த நோட்டீஸை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் தாமஸ் சாண்டி வழக்கு தொடர்ந்தார். அப்போது அரசின் புகாரை எதிர்த்து ஒரு அமைச்சரே வழக்கு தொடர்வது குற்றம் என்றும் அரசின் புகாரை ஏற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதே சரி என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும் எதிர்க்கட்சிகள் அமைச்சர் தாமஸ் சாண்டி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தாமஸை காப்பதாக முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றம்சாட்டி அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து இன்று சாலை அமைச்சரவை கூடியது. இதை தொடர்ந்து தாமஸ் சாண்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடம் அளித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications