உ.பி.யில் தான் பலாத்கார சம்பவங்கள் குறைவாக நடக்கிறதாம்: காமெடி பண்ணும் முலாயம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் குறைவான அளவு பலாத்காரங்களே நடக்கின்றன என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இது குறித்து ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

Least number of rapes take place in UP: Says Mulayam Singh Yadav

அவர் அளித்த பதில் வருமாறு,

உத்தர பிரதேசத்தின் மக்கள் தொகை 21 கோடி. உத்தர பிரதேசத்தில் தான் குறைவான அளவு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன. மாநிலத்தில் நடக்கும் அத்தனை குற்றங்களையும் தடுக்க முடியாது. அப்படி ஏதாவது நடந்தால் போலீசார் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றார்.

இது குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில்,

பலாத்காரங்கள் மட்டும் அல்ல. மேலும் பல குற்றங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் அரசுகள் உடனே தடுக்க முடியாது. உத்தர பிரதேசத்தில் நடக்கும் குற்றங்கள் பற்றி மீடியா பெரிதுபடுத்துகிறது. இது போன்ற குற்றங்கள் பிற மாநிலங்களிலும் நடைபெறுகிறது என்பது தான் உண்மை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+