மத்திய அரசின் தங்க டெபாசிட் திட்டம்... முதலீட்டு நகையை வட்டியுடன் தங்கமாக கேட்கிறது திருப்பதி கோயில்
திருப்பதி: மத்திய அரசின் தங்க நகை டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் நகைகளை, முதிர்வின் போது வட்டி மதிப்புடன் தங்கமாகவே பெற இருப்பதாகத் தெரிவித்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கம் மீதான மோகம் அதிகமாகவே உள்ளது. இதனால் பெருமளவு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ஆபரணங்களாக வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் 20 ஆயிரம் டன் தங்கத்தை வெளியில் கொண்டு வரவும் தங்க டெபாசிட் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதேபோல், தங்க நாணய திட்டம் மற்றும் தங்க பத்திர திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தங்கம் டெபாசிட்...
இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி கோயில்களும் தங்களிடம் உள்ள தங்க நகையை டெபாசிட் செய்யலாம். அதன்படி, மும்பை சித்தி விநாயகா கோயில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்ற பிரபல கோயில்களும் இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்கின்றன.

தங்கமாகவே...
தங்க டெபாசிட் திட்டத்தில் டெபாசிட் காலம் முடிந்த பிறகு முதிர்வு பலனை பணமாக அல்லது தங்கமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால், டெபாசிட் செய்யும்போதே இது குறித்து தெரிவிக்க வேண்டும். எனவே, தங்க நகை டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் நகைகளை வட்டி மதிப்புடன் தங்கமாகவே பெற இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம்...
இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இயக்குநர் டி.சாம்பசிவராவ் கூறுகையில், ‘இந்த திட்டத்தில் டெபாசிட் செய்த நகைகளை மூன்று ஆண்டுகளுக்கு மேல் முதிர்வு தொகையை பணமாக அல்லாமல் தங்கமாகவே திருப்பித்தர கேட்டிருக்கிறோம்.

மாற்றம் தேவை...
அதோடு நடுத்தர மற்றும் நீண்ட கால டெபாசிட்டுகளில் முதலீடு மற்றும் வட்டியை தங்கமாக வழங்க கோரியும், இதற்கு ஏற்ப இந்த திட்டத்தில் உள்ள சில விதிமுறைகளை மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். இத்திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள், மேலும் பல கோயில்களும் முதலீடு செய்வதற்கு தூண்டும் வகையில் கவர்ச்சிகரமானதாக அமையும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்...
கடந்த மாதம் இத்திட்டத்தில் 1.3 டன் தங்கம் 1.75 சதவீத வட்டி விகிதத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மூன்று ஆண்டுக்கு முதலீடு செய்யப்பட்டது. மேலும் 1.4 டன் தங்கத்தை ஓரிரு வாரங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முதலீடு செய்ய உள்ளோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மும்பை சித்தி விநாயக் கோயில்...
இதேபோல், மும்பை சித்திவிநாயக் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நரேந்திர முராரி ரானே தங்களது டெபாசிட் பற்றி கூறுகையில், ‘‘கோயிலின் 44 கிலோ தங்கம் இந்த மாத இறுதியில் குறுகிய கால அடிப்படையில் முதலீடு செய்ய உள்ளோம். தங்கத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே வருவதால் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால்தான் முதிர்வுடன் சேர்த்து தங்கமாகவே வழங்க கோருகிறோம்'' என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications