எழுத்தாளர்களுக்கு முடியவில்லை என்றால் நிறுத்திக்கட்டும்: இப்படி பேசும் மத்திய அமைச்சர்
டெல்லி: கருத்துரிமை பாதிக்கப்படுவதால் எழுத முடியவில்லை என்றால் எழுதுவதை முதலில் அவர்கள் நிறுத்தட்டும் என்று சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிக் கொடுக்கும் எழுத்தாளர்கள் பற்றி மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முகமது அக்லாக்(50) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்து மதத்தை விமர்சித்த காரணத்திற்காக கன்னட எழுத்தாளர் கல்பர்கி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் பல எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள்.

இதுவரை நேருவின் சகோதரியின் மகள் நயன்தாரா ஷாகல் உள்பட 23 பேர் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில்,
அவர்களால் எழுத முடியவில்லை என்று கூறினால் முதலில் எழுதுவதை நிறுத்தட்டும். அதன் பிறகு பார்ப்போம். சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர்களால் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதற்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை. விருதை திருப்பி அளிப்பது அவர்களின் விருப்பம். அதை நாங்கள் ஏற்கிறோம் என்றார்.
இந்நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிக்கையான பஞ்சசன்யாவில் கூறப்பட்டிருப்பதாவது,
சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிக் கொடுக்கும் எழுத்தாளர்களுக்கு எல்லாம் மதச்சார்பின்மை என்ற நோய் பிடித்துள்ளது. இந்த பேனா கலைஞர்கள் எல்லாம் நம் இந்து ராஜ்ஜியத்திற்கு எதிரானவர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications