பீகார், உ.பி., ஜார்க்கண்ட்டில் மின்னல் தாக்கி 95 பேர் பரிதாப பலி
பாட்னா/ லக்னோ: பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் கடந்த 24 மணிநேரத்தில் 95 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
பீகார் மாநிலத்தில் பருமழை தொடங்கியதையடுத்து நேற்று கனமழை பெய்தது. இதனால் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது.
அப்போது மின்னல் தாக்கி 46 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 8 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில அரசு தலா ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மின்னல் தாக்கியதில் 42 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்தமாக பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மின்னல் தாக்குதலுக்கு 95 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications