முதல்வராக இருந்து கொண்டு நீதிமன்றம் வரலாமா?- ஆதார் வழக்கில் மம்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: ஆதார் எண்ணை செல்போனுக்கு இணைப்பது கட்டாயமா என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு, செல்போன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மெசேஜ்கள் அனுப்பி, இணைப்பை துரிதப்படுத்த கேட்டு வருகின்றன.
வரும் மார்ச் மாதத்திற்குள் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்று, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் போன மம்தா
மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார். ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைப்பது அந்தரங்க உரிமையை மீறிய செயல் என்பது அவர் வாதம்.

மாநில முதல்வர் வர முடியாது
இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மம்தா பானர்ஜி ஒரு மாநில முதல்வராக இப்படி வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்தனர். அரசியல் சாசன சட்டப்பிரிவு 32ன் கீழ், நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை மாநில முதல்வர் எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது என்பதை நீதிமன்றம் சுட்டிக் காட்டி கண்டித்தது.

நோட்டீஸ்
அதேநேரம், மம்தா பானர்ஜி, தனிப்பட்ட ஒரு நபர் என்ற அடிப்படையில் வழக்கை தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. மேலும், ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவது தொடர்பாக பதிலளிக்குமாறு, மத்திய அரசு, செலல்போன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மம்தா உறுதி
முன்னதாக, ஆதார் அடையாள எண்ணை, செல்போன் எண்ணுடன் இணைப்பது தனது அந்தரங்க உரிமையை மீறும் செயல் என கூறியிருந்தார் மம்தா பானர்ஜி. இதற்கு தான் ஒத்துழைக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார். அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமை என்று, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக வைத்து, மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications