வீட்டுக்கு வெளியே படுத்திருந்த 14 வயது சிறுவனை கடித்து கொன்ற சிங்கம்! குஜராத்தில் பயங்கரம்
காந்திநகர்: வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்த 14 வயது சிறுவனை சிங்கம் தாக்கி கொன்று சாப்பிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் அமரேலி மாவட்டம், அம்பராடி கிராமம், கிர் வனவிலங்கு காப்பகத்தின் அருகே அமைந்துள்ளது. இங்குள்ள மாம்பழ தோட்டத்தில் வேலை செய்வதற்காக கூலித் தொழிலாளி குடும்பம் ஒன்று வந்திருந்தது.

தோட்டத்தின் உரிமையாளர், அந்த கூலித் தொழிலாளி குடும்பத்தினருக்கு, தங்குவதற்கு வீடு கொடுத்திருந்தபோதிலும்கூட, வெப்பம் காரணமாக, வீட்டை விட்டு வெளியே தொழிலாளிகள் படுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற சிங்கம் ஒன்று, பெற்றோருடன் படுத்திருந்த 14 வயது சிறுவனை கடித்து இழுத்து சென்றுள்ளது. மகனை காணோம் என்று பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசாரும், வனத்துறையினரும் தேடுதல் வேட்டை நடத்தியபோது, சிறுவனின் உடல் பாகங்கள் ஆங்காங்கு சிதறிக்கிடந்தது தெரியவந்தது.
சிங்கம் அவனை கொன்று சாப்பிட்டு, எஞ்சிய உடலை தனது இருப்பிடத்திற்கு இழுத்து சென்றுள்ளது என்று தெரியவருகிறது.
இதுகுறித்து கிர் வன காப்பாக, தாரி-கிழக்கு ரேஞ் துணை வன பாதுகாவலர் டி.கருப்பசாமி கூறியதாவது: சுமார் 3 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு, சிறுவனது உடலை கண்டுபிடித்தோம். இந்த குடும்பத்தார் வீட்டுக்குள் படுத்து தூங்கியிருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது.
சுமார் 16 சிங்கங்கள், இந்த வழியாக ஷெட்ருஞ்சி நதிக்கு செல்லும் பாதையில் இக்கிராமம் அமைந்துள்ளது. இது சிங்கங்கள் செல்லும் காரிடார். எனவேதான், கிராம மக்கள் இரவில் வீட்டுக்குள் படுத்து தூங்குமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தனர். இவ்வாறு கருப்பசாமி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications