Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவ வீரர் உடலை சிதைத்த பயங்கரம்.... இந்தியா -பாக். பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை!

காஷ்மீர் எல்லையில் இந்திய வீரரை படுகொலை செய்ததுடன் அவரின் தலையை துண்டித்து உடலை பாகிஸ்தான் ராணுவம் சிதைத்திருப்பது இருநாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளதூ.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: எல்லைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றதோடு ஒருவரின் தலையை துண்டித்து உடலையும் சிதைத்து சென்றுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அட்டூழிய நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் எல்லைப் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினர் 3 இந்திய வீரர்களை சுட்டுக்கொன்றதோடு ஒருவரின் தலையையும் துண்டித்துள்ளனர். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மந்தீப் சிங் என்ற வீரரை கொன்ற அவர்கள், அவரது உடலை துண்டு துண்டாக சிதைத்து சென்றனர்.

LoC mutilation and beheaded could affect Indo-Pak bilateral talks

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. இதனிடையே பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் அடுத்த வாரம் அமிர்தசரஸ் வர உள்ளார்.

அப்போது இருநாட்டு உறவு குறித்து பேச அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரை சந்திப்பதாகவோ அல்லது அவருடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்துவதாக இந்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறுவதும் இந்திய வீரர்களை கொடூராமாக கொல்வதுதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+