எட்டே மணிநேரத்தில் 35 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு கண்ட லோக் அதாலத்
டெல்லி: லோக் அதலத் என்னும் மக்கள் நீதிமன்றம் மூலம் நாடு முழுவதும் நிலுவையில் இருந்த 35 லட்சம் வழக்குகள் 8 மணி நேரத்தில் தீர்த்து வைக்கப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளை லோக் அதலத் என்னும் மக்கள் நீதிமன்றம் மூலம் விரைந்து தீர்க்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார். இதையடுத்து லோக் அதலத் நீதிமன்றங்களை நேற்று அவரே துவக்கி வைத்தார்.

நேற்று ஒரே நாளில் வெறும் 8 மணிநேரத்தில் நாடு முழுவதும் நிலுவையில் இருந்த 35.1 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 20 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை விட கூடுதலாக 15 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
விபத்து வழக்குள், போக்குவரத்து விதிமீறல்கள், செக் மோசடி, குடும்ப பிரச்சனை என்று பல்வேறு வகையான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications