தமிழகத்தில் விரைவில் லோக்ஆயுக்தா அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
லோக் ஆயுக்தா விவகாரத்தில் இன்னும் சொந்த கால்களில் நிற்கவில்லையா என தமிழகத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: லோக் ஆயுக்தா விவகாரத்தில் இன்னும் சொந்த கால்களில் நிற்காமல் லோக் பால் சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்காக காத்திருப்பதா என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் , மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல்களை விசாரிக்க வகை செய்யும்படி லோக்பால் மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மசோதா பெரும்பாலான மாநிலங்களில் செயல்படுத்தவில்லை.

அதுபோல் ஊழலை வெளிக்கொண்டு வரும் விதமாக நாடு முழுவதும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு கடந்த மார்ச் மாதம் தமிழகம் உள்பட 12 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு லோக்பால் சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை. அதன் காரணமாக தாங்கள் காத்திருப்பதாக பதில் அளிக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள் தமிழக அரசு இன்னும் சொந்த கால்களில் நிற்கவில்லையா என கேள்வி எழுப்பினர். தமிழக அரசு லோக் ஆயுக்தாவை ஏற்படுத்த முயற்சி எடுக்காததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உடனே அமைக்க வேண்டும் என்றும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications