நான் சோனியா காந்தி பேசுகிறேன்: டி.வி.யில் 3 நிமிடம் தோன்றி பேசிய 'மேடம்'
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு 8.57 மணி அளவில் யாரும் எதிர்பாராதவிதமாக தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். அப்போது அவர் பாஜக மற்றும் அதன் பிரதமர் வேட்பாளரான மோடியின் பெயரை குறிப்பிடாமல் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவதாக தெரிவித்தார்.
நாட்டு மக்களை பிரிக்க நினைப்பவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற இந்த தேர்தலில் காங்கிரஸ் போராடுவதாக சோனியா கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

ஒற்றுமை
நாம் ஒற்றுமையை விரும்புகிறோம். அவர்களோ என்னை நம்புங்கள் என்று கூறி வருகிறார்கள். அவர்களின் நோக்கத்தில் வெறுப்பும், பொய்யும் உள்ளது. பிரித்தாள்வது மற்றும் சர்வாதிகாரம் தான் அவர்களின் கொள்கைகள். அவர்களின் கொள்கைகள் நம் நாட்டை அழித்துவிடும் என்றார்.

3 நிமிடங்கள்
சோனியாவின் பேட்டி அனைத்து இந்தி தொலைக்காட்சி சேனல்களிலும் நேற்று இரவு சரியாக 3 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்டன.

ராகுல்
ராகுல் காந்தியின் பிரச்சாரம் எடுபடவில்லை என்பதால் சோனியாவை பிரச்சாரத்திற்கு வருமாறு கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் நாட்டின் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

பாஜக
சோனியா ஒரு புறம் பாஜக பெயரைக் கூறாமல் குறை கூற பாஜகவோ, நாங்கள் பாரதீயத்திற்காக வாக்கு கேட்கிறோம். ஆனால் காங்கிரஸோ குடும்ப அரசியலுக்காக வாக்கு கேட்கிறது என்று தெரிவித்துள்ளது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications