மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவரை விடமுடியாது.. நிரவ் மோடி குறித்து வாய்திறந்த பிரதமர் மோடி!
மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை விட முடியாது என நிரவ் மோடி குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

டெல்லி: மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை விட முடியாது என நிரவ் மோடி குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி தொடர்பாக நிரவ் மோடி நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதுவும் பேசாத மோடி
வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள நிரவ் மோடியை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி இதுவரை எதுவும் பேசாமல் இருந்து வந்தார்.

வாய்திறந்த மோடி
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் பிரதமர் மோடி நிரவ் மோடியின் மோசடி குறித்து வாய் திறந்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற 4-வது குளோபல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

நிதி முறைகேடுகள்
அப்போது பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிதி முறைகேடுகளுக்கு எதிராக அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றும் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி எச்சரிக்கை
மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் எச்சரித்தார். மேலும் நிதி நிறுவனங்களில் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் வகுக்கக்கூடிய இடத்தில் இருப்போர் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பொறுப்புடன் செயல்படுங்கள்
தங்களது வேலையில் உள்ள நெறிமுறைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இதேபோல் நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் உள்ளவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications