Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்.டி.சி. ஊழல்: பயணம் செய்யாமலேயே பயணப்படி வாங்கிய எம்.பி.க்கள் மீது சிபிஐ வழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்.டி.சி. ஊழல் தொடர்பாக 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் 3 முன்னாள் எம்.பி.க்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

எல்.டி.சி.(Leave and Travel Concession) ஊழல் குறித்து சிபிஐ முதன்முதலாக வழக்குப்பதிவு செய்துள்ளது. போலி விமான டிக்கெட்டுகளை தயார் செய்து பயணம் செய்யாமலேயே செய்ததாக கணக்கு காட்டி மத்திய அரசிடம் பணம் பெற்ற 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் 3 முன்னாள் எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சிபிஐ அதிகாரிகள் எம்.பி.க்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் டெல்லி, ஒடிஷாவில் உள்ள டிராவல் ஏஜென்ஸி அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.

அரசு அதிகாரிகள் சலுகை முறையில் பயண டிக்கெட் பெற அளித்த வாய்ப்பை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் கொல்கத்தா விமான நிலையத்தில் 600 போர்டிங் பாஸ்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தது. அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் தான் எல்.டி.சி. ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+