தலைக்கு மேலே துள்ளி குதிக்கும் எலிகள்..ம.பி ஹாஸ்பிடலில் அதிர்ச்சி!வீடியோவை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் எலிகள் துள்ளிக் குதித்து விளையாடும் வீடியோ வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் வார்டில் நோயாளி ஒருவர் படுத்திருக்க அவருக்கு பின்னே எலிகள் ஓடி ஓடி விளையாடும் வீடியோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.
இந்திய அளவில் மருத்துவத் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் வட மாநிலங்களில் மருத்துவ வசதிகள் அந்த அளவுக்கு கொடுக்கப்படுவதில்லை.

எய்ம்ஸ் போன்ற பெரிய மருத்துவமனைகள் இருந்தாலும் பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாகத் தான் இருக்கும். அரசு மருத்துவமனைகள் என்றில்லாமல் தனியார் மருத்துவமனைகளில் கூட வசதிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.
குறிப்பாக ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் பலியாவது மற்றும் எலிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தொடர் புகார்கள் வருகின்றன.
நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிப்பது, நோயாளிகளை எலிகள் கடிப்பது என ஆண்டுக்கு இரண்டு செய்திகளாவது வந்து விடும். அப்படி ஒரு செய்தி தான் தற்போது வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்லா பகுதியில் தனது குழந்தையை ஒருவர் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார். கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு குழந்தைகள் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமும் அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் தான் நேற்று அவரைப் பார்ப்பதற்காக அவரது தந்தை மருத்துவமனைக்கு வந்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு தலைக்கு பின்னேயும் மருத்துவமனை முழுவதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட எலிகள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் எந்தவித பதட்டமும் அடையாமல் இங்கு நிறைய எலிகள் இருக்கிறது.
மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் கொத்துக்கொத்தாக எலிகள் #MadhyaPradesh #GovtHospital #Rats #ChildWard #எலிகள் #OITamil pic.twitter.com/XPO6wvw1kI
— Oneindia Tamil (@thatsTamil) March 8, 2025
அதனை விரட்ட நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை. எலிகள் கடிக்கவில்லை என சந்தோஷப்படுங்கள் என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை உயரதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது.
மருத்துவமனை சுகாதாரமின்றி இயங்குவதால் எலிகள் உலா வருவதாகவும், மேலும் அடிக்கடி நோயாளிகளை அவை கடித்து விடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனையை முறையாக பராமரிக்காத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சுகாதாரத்தை பேண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பேசி உள்ள அம்மாநில காங்கிரஸ் பிரமுகரான அனுராக் சிங், மருத்துவமனைகள் மிக மோசமாக இருக்கின்றன. இந்த மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து எலிகளை கட்டுப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் அது கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு.. ஆனால் நிலைமை இன்னும் மாறவில்லை.. இனியாவது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications