Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் ட்விஸ்ட்.. சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுதலை செய்யுமாறு அவமதிக்கப்பட்ட நபர் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

போபால்: தன் மீது சிறுநீர் கழித்த பாஜகவை சேர்ந்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்குமாறு, பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரே அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தங்கள் ஊரின் பண்டிட்டான பிரவேஷ் சுக்லாவை விடுவித்து விடலாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள குப்ரி கிராமத்தில் பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா, போதையில் பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் முகத்தில் சிறுநீர் கழித்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Madhya pradesh Urination incident victim seeks release of accused Pravesh Shukla

முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிப்பு: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா பாஜகவை சேர்ந்தவர் என்பதும் அவர் பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதியாகப் பணியாற்றி வருபவர் என்றும், பிற பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சினர் பழங்குடியினரை அவமதித்தது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ம.பி முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி பிரவேஷ் சுக்லாவை கைது செய்தனர். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் பாய்ந்தது. அதன்பின் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த அவரது வீட்டையும் அதிகாரிகள் புல்டோசர்கள் மூலம் இடித்தனர்.

Madhya pradesh Urination incident victim seeks release of accused Pravesh Shukla

காலை கழுவிய முதல்வர்: இதைத்தொடர்ந்து, முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை போபாலில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவரின் காலை கழுவினார். பின்னர் அவருக்கு மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இனிப்பு ஊட்டியதோடு, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞருக்கு ரூ.6.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இது தொடர்பாக சித்தி மாவட்ட ஆட்சியர் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில், சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட தஸ்மத் ராவத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையாகவும், ரூ.1.50 லட்சம் வீட்டை புனரமைக்கும் செலவுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நபரே குற்றவாளியை விடுதலை செய்ய கோரிக்கை: இந்த நிலையில் திடீர் திருப்பமாக, பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் தஷ்மத் ராவத், தன் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா தவறை உணர்ந்ததால் அவரை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். சிறையில் உள்ள பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா, இச்சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரவேஷ் சுக்லா செய்த மோசமான செயலையும் மீறி அவரை ஏன் விடுதலை செய்யக் கோருகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "ஆம், அவர் தவறு செய்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர் எங்கள் கிராமத்தின் பண்டிட், அவரை விடுவிக்க அரசாங்கத்தை நாங்கள் கோருகிறோம்." எனத் தெரிவித்துள்ளார் அவமதிக்கப்பட்ட தஷ்மத் ராவத்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+