மாணவர்களுக்கு தேசிய கீதத்தை கற்றுக் கொடுத்தது ஒரு குத்தமா?: மதரஸா தலைமை ஆசியரை தாக்கிய மவுலவிகள்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள மதரஸா ஒன்றின் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு இந்திய தேசிய கீதத்தை கற்றுக் கொடுத்ததற்காக மவுலானாக்களால் தாக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ளது அரசு அங்கீகாரம் பெற்ற தல்புகுர் ஆரா மதரஸா. அங்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் காசி மசும் அக்தர். பேண்ட், சட்டை போட்டு தாடியில்லாமல் இருக்கும் அவரை மவுலவிகளுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் அக்தர் மாணவர்களுக்கு இந்திய தேசிய கீதத்தை கற்றுக் கொடுத்ததற்காக மவுலவிகளால் தாக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மதரஸாவுக்குள் நுழைய தடை விதித்து மவுலவிகள் பத்வா விட்டுள்ளனர். அவர் பிற மவுலவிகளை போன்று குர்தா போட்டு, தாடி வளர்க்குமாறும் கூறியுள்ளனர்.
தாடியின் அளவை வார, வாரம் புகைப்படம் எடுத்து அனுப்புமாறும் கூறியுள்ளனர். தேசிய கீதத்தை எழுதிய ரபிந்திரநாத் தாகூர் பிறந்த மண்ணில் தேசிய கீதத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காக ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அவர் கடந்த மார்ச் மாதம் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டதில் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டு மாதக் கணக்கில் மருத்துவமனையில் இருந்தார். அவர் பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது மவுலவிகளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அக்தர் தனக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி போலீசார், முதல்வர் மமதா, ஆளுநர், சிறுபான்மையினர் நல கமிஷன் தலைவர் ஆகியோரிடம் முறையிட்டும் பலனில்லை.
-
Kalamkaval OTT: மம்மூட்டி பலான வில்லனாக கலக்கிய களம் காவல் ஓடிடி ரிலீஸ்! எப்போது, எதில் பார்க்கலாம்? -
அமெரிக்காவில் ஜாலியாக சுற்றுலா சென்ற 2 இந்திய பெண்கள்: எந்த பெற்றோரும் பார்க்கக்கூடாத கோலம் -
New Year Rasi Palan: தனுசு ராசிக்கு சவாலான புத்தாண்டு.. அஷ்டமகுரு பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகுது -
மகளிர் உரிமைத் தொகை.. இனி "இவர்களுக்கு" மட்டும் ரூ.1000? அரசு திட்டம், வரிப்பணம் குறித்து அதிமுக நச் -
New Year Rasi Palan: வெற்றிக் கொடி கட்டப் போகும் "விருச்சிக ராசி".. இனி தான் ஒரிஜினல் ஆட்டமே ஆரம்பம் -
ஆம்பூரில் கோதுமை நாகப்பாம்பு.. அதன் வாய்க்குள் எட்டிப் பார்த்தால் "குருவி".. ஆடிப் போன திருப்பத்தூர் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயிலுக்கு தெரிய வந்த சூழ்ச்சி.. இன்ஸ்பெக்டர் கேள்வியால் அதிர்ந்த சக்திவேல்! -
தமிழ்நாடே வேண்டாம்.. நான் ஊருக்கு போறேன்.. தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளி மருத்துவமனையில் கதறல் -
பழைய ஓய்வூதிய திட்டம்! ககன்தீப் சிங்கே அறிக்கை கொடுத்துட்டாரே! ஜன.6-க்குள் அமல்படுத்துங்க! அன்புமணி -
ஜனவரி முதல் அனைத்து வாகனங்களிலும்.. ஆண்டி லாக் பிரேக்கிங் கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி உத்தரவு -
பிக் பாஸில் நடந்த அடிதடி.. அதிரடியாக வெளியேற்றப்பட்ட பார்வதி! இது அன்ஃபேர்! திட்டும் ரசிகர்கள் -
ஏற்காடு காபி தோட்டத்தில் உல்லாசம்.. 300 அடி பள்ளத்தில் காதலி.. தானாகவே பொறியில் சிக்கிய சேலம் காதலன்












Click it and Unblock the Notifications