OMG! கால்சென்டர் பெண் பலாத்கார அதிர்வு அடங்கும் முன்பு, பெங்களூரில் ஆண் பி.பி.ஓ ஊழியர் பலாத்காரம்
பெங்களூர்: கால்சென்டர் பெண் ஊழியர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தின் வடு ஆறும் முன்பு பெங்களூர் பி.பி.ஓ ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது ஒரு ஆண் என்பதுதான் விஷயம்.
பெங்களூரில் ஓடும் வேனில் கால்சென்டர் பெண் ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்டதும், அது தொடர்பாக இரு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், ஆண் பிபிஓ ஊழியர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக, தாமதமாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழி மறித்த கார்
மைக்கோ லேஅவுட் பகுதியிலுள்ள ஒரு பி.பி.ஓவில் பணியாற்றும் இரு ஆண்கள், அந்த நிறுவனத்தின் பிக்-அப் காரில் கடந்த மாதம் 29ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் பயணித்துக்கொண்டிருந்தனர். குறுக்கு சந்து ஒன்றில், எதிரே ஒரு கார் வந்து இந்த காரை வழிமறித்து நிறுத்தியுள்ளது.

அத்துமீறல்
எதிர் காரில் இருந்த இருவர், திடீரென கீழே இறங்கி, பி.பி.ஓ காருக்குள் வந்து ஏறியுள்ளனர். வண்டியை ஏடிஎம் அருகே ஒட்டிச்செல்லுமாறு மிரட்டியுள்ளனர். பி.பி.ஓ டிரைவரும் அதேபோல செய்துள்ளார். ஏடிஎம்மில், பி.பி.ஓ ஊழியர் இருவரும் பணத்தை எடுத்துதருமாறு மிரட்டப்பட்டனர். ஆனால் அக்கவுண்டில் பணமில்லை என்று பதில் வந்தது.

பலாத்காரம்
கோபமடைந்த கொள்ளையர்கள், அந்த காரை, ஜேபிநகர், ராகிகுட்டா பகுதிக்கு ஓட்டிச்செல்ல கூறியுள்ளனர். வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு, பி.பி.ஓ ஊழியர்கள் இருவர் மற்றும் அதன் டிரைவரை நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர், அதில் ஒருவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்பிறகு அவர்கள் தப்பிவிட்டனர்.

அதிரடி கைது
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், இச்செயலில் ஈடுபட்ட கிரண் (29) மற்றும் சதீஷ் (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது செக்ஷன் 377 என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கைக்கு மாறாக, ஆண், பெண், விலங்குகளுடன் உடலுறவில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க இந்த சட்டத்தில் இடமுள்ளது.












Click it and Unblock the Notifications