'திரும்பி வந்துட்டேனு சொல்லு'.. ஒரு நாள் தடைக்கு பிறகு.. இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் மம்தா
கொல்கத்தா: மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இன்று முதல் அவர் மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
மேற்கு வங்கத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
அடுத்தாக வரும் ஏப்ரல் 17ஆம் தேதி ஐந்தாம் கட்டமாக 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

சர்ச்சை பேச்சு
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, கடந்த சில தினங்களுக்கு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் புகார் எழுந்தது. அதாவது பாஜகவிடம் பணம் பெற்றுகோண்டு பேசும் சைத்தானின் பேச்சைக் கேட்டு சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்க வேண்டாம் என்று மம்தா பேசியிருந்தார். இது குறித்து பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது.

ஒரு நாள் தடை
மம்தாவின் பேச்சு சமூகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாலும் இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதாலும் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதித்தது. ஏப்ரல் 12ஆம் தேதி இரவு 8 மணி முதல் நேற்றிரவு 8 மணி வரை மம்தா பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுவதாக மம்தா குற்றஞ்சாட்டினார்.

தர்ணா போராட்டம்
மேலும், நேற்று மதியம் கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்திலும் அவர் ஈடுபட்டார். தனி ஆளாக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வழக்கமாக மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் மம்தா, அமைதியாக ஓவியம் வரைந்தார். மதியம் 12 மணிக்கு தொடங்கிய மம்தாவின் தர்ணா போராட்டம் இரவு முடிவுக்கு வந்தது.

மீண்டும் மம்தா
மம்தாவுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்றுடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அவர் இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார். 5ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மம்தா இன்றையப் பிரசாரம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. மம்தா மீண்டும் பிரசாரத்தை தொடங்குவதால், திரிணாமுல் கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பாஜக நிர்வாகி
முன்னதாக, நேற்று கூச் பிகார் சம்பவம் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மூத்த நிர்வாகி ராகுல் சின்ஹா பிரசாரம் செய்ய 2 நாட்கள் தடை விதித்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கூச் பிகாரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேருக்குப் பதிலாக 8 பேரையாவது சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என ராகுல் சின்ஹா பேசியிருந்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications