மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 60 எம்எல்ஏக்கள் அவரை விட்டு பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 எம்பிக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் பாஜகவில் இணைய உள்ளதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தமாக கரையும் நிலைக்கு சென்றுள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் முன்னாள முதல்வர் மம்தா பானர்ஜியின் வீடியோ திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மம்தா பானர்ஜியும் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்தார்.

mamata-banerjees-20-trinamoool-congress-mps-touch-with-bjp

மம்தா பானர்ஜியை வீழ்த்திய பாஜகவின் சுவேந்து அதிகாரி முதல்வராகி உள்ளார். இந்த தேர்தல் தோல்வியை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 80 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 60 பேர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். முதல் முறையாக எம்எல்ஏவாகி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி மம்தா பானர்ஜி சஸ்பெண்ட் செய்த ரிதப்தரதா பானர்ஜி தலைமையில் 60 எம்எல்ஏக்கள் அணி சேர்ந்துள்ளனர். அதோடு அவர்கள் ரிதரப்ராதா பானர்ஜியை எதிர்க்கட்சி தலைவராக்கி உள்ளனர். இதற்கு அம்மாநில சபாநாயகர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இது மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள எம்எல்ஏக்களில் 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் ரிதப்ரதா பானர்ஜி வசம் உள்ளதால் கட்சி தாவல் தடை சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் மம்தா பானர்ஜி உள்ளார். இந்த குழப்பத்துக்கு நடுவே தான் தற்போது மம்தா பானர்ஜிக்கு அந்த கட்சியின் எம்பிக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 20 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா , லோக்சபா என்று இரு சபைகளிலும் சேர்த்து மொத்தம் 41 எம்பிக்கள் உள்ளனர்.

இதில் லோக்சபாவில் 28 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 13 எம்பிக்களும் உள்ளனர். இவர்களில் 20 பேர் பாஜகவுக்கு சேர தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த எம்பிக்கள் பாஜகவிற்கு தாவுதற்கான விருப்பத்தை கூறி தற்போது மேலிட தலைவர்களுடன் பேசி வரும் நிலையில் விரைவில் அவர்கள் கட்சி தாவுவார்கள் எனறு கூறப்படுகிறது.

இது நடந்தால் மம்தா பானர்ஜிக்கு அரசியல் ரீதியாக பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும். ஏனென்றால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். அதோடு அவரது கட்சியும் மேற்கு வங்கத்தில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. வென்ற 80 எம்எல்ஏக்களில் 20 பேர் மட்டுமே மம்தா பானர்ஜியுடன் உள்ள நிலையில் 60 பேர் தனியாக செயல்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கும்போது 20 எம்பிக்களும் பாஜகவுக்கு தாவினால் அது மம்தா பானர்ஜிக்கு பெரிய அடியாக அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+